இலவசத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தபின்னர், அதன் பலனை தொடர்புடையோர் அனுபவிக்க முடியாததுடன், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பு அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், அத்தகைய திட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும்? அப்படியொரு திட்டமாக மாறி வருகிறது மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்.
பள்ளிக் குழந்தைகள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தாலும், பேருந்துகள் நிற்காமல் அவர்களைக் கடந்து ஓடுவதும், மாணவர்கள் அப்பேருந்தை விரட்டிச் செல்வதும், பாதிப் பேர் ஏறியும், மீதிப் பேர் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழக நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.
அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு மாணவர், நிற்காது சென்ற பேருந்தை விரட்டிச் சென்று ஏற முயன்றபோது கீழே விழுந்து இறந்தார். ராமநாதபுரத்தில் ஒரு மாணவி, இலவசப் பயண அட்டை இல்லாத காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதனால் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த இரு சம்பவங்களையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. நீதிபதிகள் டி. முருகேசன், எஸ். நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாணவர்களுக்குப் பிரச்னை இல்லாதபடி அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதுடன், ஓட்டுநர், நடத்துநர்களை எச்சரித்துள்ளனர். இத்தகைய சம்பவம் மீண்டும் தங்கள் கவனத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
வசூல் "பேட்டா' குறைகிறது என்பதற்காக மாணவர்களை நடத்துநர்களும், ஓட்டுநர்களும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அடிப்படையான காரணத்தை இந்த வழக்கில் நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆம். இதுதான் கசப்பான உண்மை.
1990-ல் திமுக அரசு கொண்டு வந்த திட்டம்தான் பேருந்துகளில் மாணவர் இலவசப் பயணத் திட்டம். முதலில் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் இதை பிளஸ் 2 மாணவர்கள் வரை நீட்டித்தார்கள். அதன் பிறகு அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இப்போது தொழிற்பயிற்சிக் கல்லூரி (ஐடிஐ) மாணவர்களுக்கும் கடந்த மே மாதம் இச்சலுகை நீட்டிக்கப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தால் பள்ளி மாணவர்கள் 2.81 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேரும் பயனடைகின்றனர்.
இத்திட்டம் இலவசப் பயணம் என்ற பெயரில் இருந்தாலும் இது இலவசமே அல்ல. இந்த சேவைக்காக மக்கள் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ 300 கோடியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு அளிக்கிறது. அதாவது, மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ 10,000 மக்கள் வரிப்பணம் இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிறகு ஏன் இந்த அவமானம்? பிறகு ஏன் மாணவர்களைக் கண்டால் பேருந்தை நிறுத்தாமல் வேகமாகப் பறக்கிறார்கள்? இதற்குக் காரணம் நீதிமன்றம் குறிப்பிட்டதைப்போல, வசூல் "பேட்டா'தான்!
ஒவ்வொரு நாளும் ஒரு பேருந்தில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலாகும் பணத்தில், 2 விழுக்காடு தொகை "கலெக்ஷன்
பேட்டா' என அளிக்கப்படுகிறது. இதனை ஓட்டுநரும் நடத்துநரும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ 10,000 வசூல் என்றால், ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் தலா ரூ 100 கிடைக்கும். இத்தகைய இலவச பயண அட்டைகள் இவர்களது வசூல் கணக்கில் ஏறாது. இவர்களை ஏற்றினால் பேருந்து நிரம்பிவிடும். இந்த மாணவர்களால் வசூல் "பேட்டா' கிடைக்காது என்பதுடன், மற்ற பயணிகளை ஏற்ற முடியாதபடி மாணவர்களே பேருந்தில் நிரம்பி வழிவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியாததன் விளைவுதான் இலவச பயண அட்டை மாணவர்களை இவ்வாறாகப் புறக்கணிக்கிறார்கள் என்கிற நீதிமன்றத்தின் கணிப்பு சரியானதுதான்.
எத்தனையோ செய்திகள், படங்கள், புகார்கள் என்றாலும் அரசுப் போக்குவரத்துக் கழகமோ, அத்துறை அமைச்சரோ இதைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏளனப் புன்னகையுடன் புறந்தள்ளி விடுகிறார்கள். அவமானப்படுவதும் அவதிப்படுவதும் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அல்லவே!
மாணவர்கள் அவமதிக்கப்படுவதை உண்மையிலேயே தமிழக அரசு விரும்பவில்லை என்றால், தற்போதைய நடைமுறையை மாற்றியாக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு 180 வேலை நாள்களுக்காக 360 "டோக்கன்'களை அளித்து, அந்த "டோக்கன்'களை நடத்துநர் தனது வசூல் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் புதிய நடைமுறையை உருவாக்கினால் மட்டுமே, நடத்துநர்களும் ஓட்டுநர்களும் இந்த மாணவர்களை மனித உயிர்களாக, பயணிகளாக மதிப்பார்கள். இல்லாவிட்டால், மாணவர்கள் ஆண்டுதோறும் ஆங்காங்கே இறப்பது நடக்கவே செய்யும்.
ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் நீதிமன்றம் தந்துள்ள இந்த நம்பிக்கையான தீர்ப்பைப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை ஏற்றிக்கொள்ள மறுத்து விலகி ஓடும் பேருந்துகள் பற்றிய தகவல்களுடன் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக வழக்குத் தொடுக்கலாம். நீதிமன்றத்தின் படியேறுவோர் எண்ணிக்கை அதிகமாகும்போதாகிலும், இவர்கள் கீழ்ப்படிவார்களா என்பதைப் பார்க்கலாம்.
தினமணி
நான் ரொம்ப பிஸினு சொல்றவங்க இந்த பக்கம் வர வேணாம்....நீங்க நம்மாளு இல்ல..உங்க ரேஞ்சே வேற... $$ இங்க எல்லாமே சுட்ட பழம் தான் $$
Friday, September 17, 2010
Thursday, September 16, 2010
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!
1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!
6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க..! )
9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்..
நல்ல டாக்டரா போயி பார்க்கிறது Better.
பதிவு செய்தவர்
http://gokulathilsuriyan.blogspot.com/2010/02/blog-post_19.html
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!
6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க..! )
9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்..
நல்ல டாக்டரா போயி பார்க்கிறது Better.
பதிவு செய்தவர்
http://gokulathilsuriyan.blogspot.com/2010/02/blog-post_19.html
Labels:
படித்ததில் பிடித்தது
பேச்சிலர் வாழ்க்கையும் வாடகை வீடும்
பேச்சிலரா இருந்தா சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது கஷ்டம் என்று சொல்வது உண்டு. ஆனால் சில ஹவுஸ் ஓனர்கள் இவர்களுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் ஆர்வமாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு.
1) முன்பு குடியிருந்தவர்களின் வாடகையை விட அதிகமாக சொன்னால், காரணம் ஏதும் கேட்காமல் சரி என்று தலையை ஆட்டுவது. (நம்மளை வீடு பார்க்க கூட்டி வருகிறவன் ஒரு பயம் காட்டித்தான் கூட்டி வருவான், உலகத்துல வேற யாருமே பேச்சிலருக்கு வீடு கொடுக்க மாட்டாங்க. இவங்க மட்டும் தான் கொடுப்பாங்க, காசு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குமுனு)
2) வடக்கு வாசல், கிழக்கு வாசல் என்ற முறைவாசல்களுக்கு நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று அவர்களிடன் பொறுப்பை ஒப்படைத்து பணம் கொடுத்து விடுவது. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை கட்டிக்கொண்டு கோலமா போட முடியும்)
3) தண்ணீர், கார்ப்பரேசன், மின்சாரம் என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த தொகையை மாதம் மாதம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவது.(காலையிலே தூக்கம் எழுவதே லேட்டாக தான் இருக்கும். அந்த நேரம் தண்ணி வரவில்லை, பாத்ரூம் சரியில்லை என்று நிற்கமுடியுமா? இது அவங்களுக்கும் தெரியும்.)
4) காலையில் குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிளம்பிய பிறகுதான் அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவது. லீவு நாளாக இருந்தால் சொல்லவே வேண்டாம் இரவு முழுவதும் டீவி/கம்பியூட்டர் முன் கண்விளித்துவிட்டு பகலில் நல்லா குறட்டை விட்டு தூங்குவது.
5) சுவரில் ஆணி அடித்துவிடுவார்கள் என்று பயப்பட தேவையில்லை. காரணம் அறையில் சாமி படங்களோ அல்லது அம்மா, அப்பா படங்களோ தொங்கவிடுவது இல்லை. அப்படியே படங்கள் இருந்தாலும் அது நடிகர் அல்லது நடிகைகளின் படங்களாகத் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அதனால் எளிதில் அவற்றை அப்புறப்படுத்த முடியும்.
6) தண்ணீர் செலவாகிடும் என்று பயப்பட தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிளம்பி போனால் இரவுதான் வீட்டிற்கு வருவது. துணிகள் துவைப்பார்களா? என்று எல்லோருக்கும் டவுட் இருக்கும். இதற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாததிற்கு ஒரு தடவை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.
7) வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்து, போர் அடிக்குதே என்று மாடிப்பக்கம் போய் நின்று ஒரு தம்மை போடலாம் என்று பத்தவைக்கும் போதுதான் ஹவுஸ் ஓனர் மேலே வருவார். என்ன தம்பி இங்க தான் இருக்கீங்களா? என்று மொக்கைப்போட தொடங்கிவிடுவார். அப்படியே நாமளும் நம்ம கதையை கேக்க ஒருத்தர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட ஆரம்பிச்சிடுவோம். அவரு நம்மகிட்ட கதை கேக்குறேன் என்கிற பேர்ல ஊர்ல என்ன பயிர் விளையுது, அங்க என்ன ஸ்வீட் பேமஸு, உங்க வீட்ல என்ன பழம் எல்லாம் இருக்குனு வாயில இருந்து புடிங்கிடுவாரு. நாமளும் கதைதானே என்று பக்கத்து வீட்ல விளையுறது எல்லாம் எங்க வீட்டுல விளையுதுனு ஜம்பம் அடிச்சி வைப்போம். இப்படி சொல்லுறதால அப்ப ஒண்ணும் பிரச்சனை இருக்காது, ஆனா தீபாவளி, பொங்கலுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹவுஸ் ஓனரிடம் கொடுக்கும் போதுதான் பிரச்சனையே. தம்பி இங்க இந்த பழம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல இருந்து வரும் போது அப்படியே கொஞ்சம் எடுத்து வாங்களேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்
8) நாம் ரூம்ல பகல்ல இருப்பதே அபூர்வமா தான் இருக்கும். ஏதாவது முக்கிய ஆபிஸ் வேலையை முடிக்கலாம் என்று இருந்தால் அப்ப தான் ஹவுஸ் ஓனர் அக்கா டீவி சீரியல் பார்க்க விடாமல் அடம்பிடிக்கிற மகனை பார்த்து, மேல மாடில இருக்கிற அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவரோட விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க. அவங்க ஜாலியா சீரியல் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க, ஆனா பையன் நம்மளை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.
9) சமையல் அறை ஒன்றை மறந்தே இருப்பார்கள். அங்கு தான் துணிகள் உலர்த்தப்படும். அதனால் வீட்டில் புகை மற்றும் சுவர் அழுக்காகிவிடும் என்ற பிரச்சனை ஹவுஸ் ஓனருக்கு இருக்காது. அப்படியே சமையல் என்று ஆரம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக தான் இருக்கும். ஐந்தாவது நாள் ஹோட்டலை தான் தேடுவார்கள். இந்த நாலு நாளு கூத்துக்கு வாங்கிய பாத்திரங்கள் எல்லாம் வீடு காலி பண்ணும் போது ஹவுஸ் ஓனருக்கு தான் சொந்தம்.
10) வீட்ல அது சரியில்லை, இது சரியில்லை என்ற புலம்பல் இல்லாமல் சரியா சொன்ன தேதில வீட்டு வாடகையை கொண்டு போய் ஹவுஸ் ஓனரிடம் சேர்த்துவிடுவது.
பதிவு செய்தவர்
http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/09/blog-post.html
1) முன்பு குடியிருந்தவர்களின் வாடகையை விட அதிகமாக சொன்னால், காரணம் ஏதும் கேட்காமல் சரி என்று தலையை ஆட்டுவது. (நம்மளை வீடு பார்க்க கூட்டி வருகிறவன் ஒரு பயம் காட்டித்தான் கூட்டி வருவான், உலகத்துல வேற யாருமே பேச்சிலருக்கு வீடு கொடுக்க மாட்டாங்க. இவங்க மட்டும் தான் கொடுப்பாங்க, காசு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குமுனு)
2) வடக்கு வாசல், கிழக்கு வாசல் என்ற முறைவாசல்களுக்கு நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று அவர்களிடன் பொறுப்பை ஒப்படைத்து பணம் கொடுத்து விடுவது. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை கட்டிக்கொண்டு கோலமா போட முடியும்)
3) தண்ணீர், கார்ப்பரேசன், மின்சாரம் என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த தொகையை மாதம் மாதம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவது.(காலையிலே தூக்கம் எழுவதே லேட்டாக தான் இருக்கும். அந்த நேரம் தண்ணி வரவில்லை, பாத்ரூம் சரியில்லை என்று நிற்கமுடியுமா? இது அவங்களுக்கும் தெரியும்.)
4) காலையில் குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிளம்பிய பிறகுதான் அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவது. லீவு நாளாக இருந்தால் சொல்லவே வேண்டாம் இரவு முழுவதும் டீவி/கம்பியூட்டர் முன் கண்விளித்துவிட்டு பகலில் நல்லா குறட்டை விட்டு தூங்குவது.
5) சுவரில் ஆணி அடித்துவிடுவார்கள் என்று பயப்பட தேவையில்லை. காரணம் அறையில் சாமி படங்களோ அல்லது அம்மா, அப்பா படங்களோ தொங்கவிடுவது இல்லை. அப்படியே படங்கள் இருந்தாலும் அது நடிகர் அல்லது நடிகைகளின் படங்களாகத் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அதனால் எளிதில் அவற்றை அப்புறப்படுத்த முடியும்.
6) தண்ணீர் செலவாகிடும் என்று பயப்பட தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிளம்பி போனால் இரவுதான் வீட்டிற்கு வருவது. துணிகள் துவைப்பார்களா? என்று எல்லோருக்கும் டவுட் இருக்கும். இதற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாததிற்கு ஒரு தடவை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.
7) வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்து, போர் அடிக்குதே என்று மாடிப்பக்கம் போய் நின்று ஒரு தம்மை போடலாம் என்று பத்தவைக்கும் போதுதான் ஹவுஸ் ஓனர் மேலே வருவார். என்ன தம்பி இங்க தான் இருக்கீங்களா? என்று மொக்கைப்போட தொடங்கிவிடுவார். அப்படியே நாமளும் நம்ம கதையை கேக்க ஒருத்தர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட ஆரம்பிச்சிடுவோம். அவரு நம்மகிட்ட கதை கேக்குறேன் என்கிற பேர்ல ஊர்ல என்ன பயிர் விளையுது, அங்க என்ன ஸ்வீட் பேமஸு, உங்க வீட்ல என்ன பழம் எல்லாம் இருக்குனு வாயில இருந்து புடிங்கிடுவாரு. நாமளும் கதைதானே என்று பக்கத்து வீட்ல விளையுறது எல்லாம் எங்க வீட்டுல விளையுதுனு ஜம்பம் அடிச்சி வைப்போம். இப்படி சொல்லுறதால அப்ப ஒண்ணும் பிரச்சனை இருக்காது, ஆனா தீபாவளி, பொங்கலுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹவுஸ் ஓனரிடம் கொடுக்கும் போதுதான் பிரச்சனையே. தம்பி இங்க இந்த பழம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல இருந்து வரும் போது அப்படியே கொஞ்சம் எடுத்து வாங்களேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்
8) நாம் ரூம்ல பகல்ல இருப்பதே அபூர்வமா தான் இருக்கும். ஏதாவது முக்கிய ஆபிஸ் வேலையை முடிக்கலாம் என்று இருந்தால் அப்ப தான் ஹவுஸ் ஓனர் அக்கா டீவி சீரியல் பார்க்க விடாமல் அடம்பிடிக்கிற மகனை பார்த்து, மேல மாடில இருக்கிற அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவரோட விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க. அவங்க ஜாலியா சீரியல் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க, ஆனா பையன் நம்மளை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.
9) சமையல் அறை ஒன்றை மறந்தே இருப்பார்கள். அங்கு தான் துணிகள் உலர்த்தப்படும். அதனால் வீட்டில் புகை மற்றும் சுவர் அழுக்காகிவிடும் என்ற பிரச்சனை ஹவுஸ் ஓனருக்கு இருக்காது. அப்படியே சமையல் என்று ஆரம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக தான் இருக்கும். ஐந்தாவது நாள் ஹோட்டலை தான் தேடுவார்கள். இந்த நாலு நாளு கூத்துக்கு வாங்கிய பாத்திரங்கள் எல்லாம் வீடு காலி பண்ணும் போது ஹவுஸ் ஓனருக்கு தான் சொந்தம்.
10) வீட்ல அது சரியில்லை, இது சரியில்லை என்ற புலம்பல் இல்லாமல் சரியா சொன்ன தேதில வீட்டு வாடகையை கொண்டு போய் ஹவுஸ் ஓனரிடம் சேர்த்துவிடுவது.
பதிவு செய்தவர்
http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/09/blog-post.html
Labels:
உங்களுக்கு உதவும்
தோசை சுட்டு உயர்ந்த தமிழன்
சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் இந்தியர்களை பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை.
ப்ரேம் கணபதி.
---
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.

மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல், பம்பாய்க்கு ஓடி போய் விட்டார். (ஓடி என்றால் ஓடியே இல்லை! ரயிலில்...) அப்போது அவருக்கு வயது 17.
அந்த பையனுக்கு ஓசியில் பம்பாய் வருவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பம்பாய் வந்தவுடன் கணபதியை பந்த்ராவில் கைகழுவி விட்டு ஓடிவிட்டான். புது ஊரு. புது மனிதர்கள். புரியாத மொழி. கைல காசு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை, கணபதிக்கு.
அங்கிருந்த ஒரு நல்ல டாக்ஸி டிரைவர், இவர் கதையை கேட்டு, ரயிலுக்கு காசு கொடுத்து ஊருக்கு திரும்ப சொல்ல, கணபதி அதை மறுத்து அங்கேயே இருந்துவிட்டார். ஒரு கோவிலில் படுத்துறங்கி, காலையில் ஒரு பேக்கரில் வேலைக்கு சேர்ந்தார். பாத்திரம் கழுவும் வேலை. சில மாதங்களுக்கு பிறகு, வேறொரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதே பாத்திரம் கழுவும் வேலைதான்.
கொஞ்சம் நாள் கழித்து, அக்கம்பக்கமிருக்கும் கடைகளுக்கு டீ சப்ளை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடமையே என்று வேலையை பார்க்காமல், வேலையில் முழு ஆர்வத்தையும் காட்டினார். டீ சப்ளை செய்வதில் என்ன ஆர்வம் என்கிறீர்களா? யார் யாருக்கு எப்படி டீ இருக்க வேண்டும் என்று புரிந்து சப்ளை செய்தார். விரைவில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவராகி போனார். இவர் வேலையை பார்த்த ஒருவர், இவரிடம் கூட்டணி அமைத்துக்கொண்டு ரோட்டோரத்தில் கடை போடும் ஐடியாவை சொல்லியிருக்கிறார். கடையையும் போட்டார்கள். ஆரம்பத்தில் லாபத்தில் பாதியை தருவதாக சொன்னவர், வெறும் 1200 ரூபாய் மட்டும் கொடுத்தார். ’இதை நாங்களே பண்ணுவோம்ல’ என்று கணபதி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ஊருக்கு வந்து நண்பர்களிடம் கொஞ்சம் பணம் புரட்டிக்கொண்டு, தனது சகோதரர்களையும் தன்னுடன் அழைத்து கொண்டு திரும்ப பம்பாய் வந்தார். ஒரு கைவண்டியை வாடகைக்கு எடுத்து, அதில் சாப்பாட்டுக்கடை போட்டார்.
சுத்தம். வகை வகையா சுவை. இதில் தான் முழு கவனத்தையும் செலுத்தினார். வீட்டில் அம்மா எப்படி சமைப்பாரோ, அதை போல் சமைத்தார். மசாலாவை ஊரில் இருந்தே கொண்டு வந்தார். பாம்பேக்கு அந்த சுவை வித்தியாசமாக இருக்க, கூட்டம் கூடியது. அப்போது கணபதி தங்கியிருந்தது, சில மாணவர்களுடன். நட்புடன் பழகிய அவர்கள், கணபதிக்கு ரூமில் கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்க, இணையத்தில் உலவவும் தெரிந்துக்கொண்டார். மெக் டொனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் பற்றியெல்லாம் பார்த்தார். படித்தார். வருடங்கள் ஓட, அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்தார். அவருடைய அன்றைய நிலைக்கு பெரிய ஸ்டெப்.
ஐம்பதாயிரம் அட்வான்ஸ், ஐந்தாயிரம் வாடகை கொடுத்து, ’ப்ரேம் சாகர் தோசா ப்ளாஸா’ என்று ஒரு கடையை ஆரம்பித்தார். விதவிதமாக தோசையை சுட்டு விற்றார். விற்று தீர்ந்தது. கூடவே, சைனீஸ் ஐட்டங்களையும் போட்டார். ஆனால், அது போணியாகவில்லை. இருந்தும், விடவில்லை. அந்த ஸ்டைலில் தோசையை சுட்டார். மெகா ஹிட்.

செஸ்வான் தோசை, ஸ்ப்ரிங் ரோல் தோசை என்று மெனு களைக்கட்ட, கல்லாவும் களைக்கட்டியது. பேரும் புகழும் பரவியது. ‘தோசா ப்ளாஸா’ என்பது அந்த வட்டாரத்தில் பிரபல ப்ராண்டானது. ‘தோசா ப்ளாஸா’ என்று சும்மா இவர் பெயர் வைத்துவிடவில்லை. பிஸ்ஸா ஹட், கோக்க கோலா போன்ற பெயர்களை கவனமாக பார்த்து, ஆராய்ந்து இந்த பெயரை வைத்தார். ஒரு ஷாப்பிங் மால் கட்டியவர்கள், இவரை கடை போட அழைத்தார்கள். இவரும் கடை திறந்தார். இன்னொரு ஷாப்பிங் மாலில், ‘தோசா ப்ளாஸா’ என்ற பெயரில் இன்னொருவர் கடை திறக்க உரிமம் கொடுத்தார். வியாபார அடையாளத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். ‘டாக்டர். டி அங்கீகரித்தது’ (Approved by Doctor. D) என்பது லோகோவானது. தற்போது குறைந்தபட்சம் பத்து லட்சம் இருந்தா தான், ஆட்டத்துக்கே சேர்த்துக்கொள்கிறார்.

இப்ப, இதுவரை 35 கடைகள் திறந்துவிட்டார். நியூசிலாந்திலும் ‘தோசா பிளாஸா’ இருக்கிறது. அடுத்து அமெரிக்காவிலும், துபாயிலும் கடை போட போகிறார். ஒரு யூனிவர்சிட்டியில் இவருடைய கடை பற்றிய பாடம் இருக்கிறது. மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு வந்திருக்கிறார். முன்னாள் நியூசி பிரதமர், சேவாக், லதா ரஜினிகாந்த் ஆகியோர் இவர் கடை கஸ்டமர்கள். ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு இவரை அழைத்திருக்கிறார். அனிதா கிருஷ்ணமூர்த்தி எழுதி, அப்துல் கலாம் வெளியிட்ட “மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு” புத்தகத்தில் இவரும் இருக்கிறார்.
---
“உங்கள பாம்பேயில தனியா விட்டுட்டு போன அந்த பையனை நினைப்பதுண்டா?” என்ற கேள்விக்கு,
”நான் இந்த நிலையில் இருக்குறேன்னா, அதுக்கு காரணம் அவன் தான். எங்கிருக்கிறானோ அவன்?” என்று தன்னை கைவிட்டவனையும் நன்றி கூர்கிறார். தமிழன் என்பதால் கேவலப்பட்டது, ரோட்டோர கடையால் போலீஸ் பிரச்சினையை சந்தித்தது போன்றவையை தாண்டி, இன்று தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்.
எம்பிஏ போல் எதுவும் படிக்காமல், இந்த நிலைக்கு எம்பியே வந்திருக்கும் ப்ரேம் கணபதி மேலும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்.
Source
http://www.saravanakumaran.com/2010/09/blog-post_15.html
ப்ரேம் கணபதி.
---
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.

மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல், பம்பாய்க்கு ஓடி போய் விட்டார். (ஓடி என்றால் ஓடியே இல்லை! ரயிலில்...) அப்போது அவருக்கு வயது 17.
அந்த பையனுக்கு ஓசியில் பம்பாய் வருவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பம்பாய் வந்தவுடன் கணபதியை பந்த்ராவில் கைகழுவி விட்டு ஓடிவிட்டான். புது ஊரு. புது மனிதர்கள். புரியாத மொழி. கைல காசு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை, கணபதிக்கு.
அங்கிருந்த ஒரு நல்ல டாக்ஸி டிரைவர், இவர் கதையை கேட்டு, ரயிலுக்கு காசு கொடுத்து ஊருக்கு திரும்ப சொல்ல, கணபதி அதை மறுத்து அங்கேயே இருந்துவிட்டார். ஒரு கோவிலில் படுத்துறங்கி, காலையில் ஒரு பேக்கரில் வேலைக்கு சேர்ந்தார். பாத்திரம் கழுவும் வேலை. சில மாதங்களுக்கு பிறகு, வேறொரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதே பாத்திரம் கழுவும் வேலைதான்.
கொஞ்சம் நாள் கழித்து, அக்கம்பக்கமிருக்கும் கடைகளுக்கு டீ சப்ளை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடமையே என்று வேலையை பார்க்காமல், வேலையில் முழு ஆர்வத்தையும் காட்டினார். டீ சப்ளை செய்வதில் என்ன ஆர்வம் என்கிறீர்களா? யார் யாருக்கு எப்படி டீ இருக்க வேண்டும் என்று புரிந்து சப்ளை செய்தார். விரைவில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவராகி போனார். இவர் வேலையை பார்த்த ஒருவர், இவரிடம் கூட்டணி அமைத்துக்கொண்டு ரோட்டோரத்தில் கடை போடும் ஐடியாவை சொல்லியிருக்கிறார். கடையையும் போட்டார்கள். ஆரம்பத்தில் லாபத்தில் பாதியை தருவதாக சொன்னவர், வெறும் 1200 ரூபாய் மட்டும் கொடுத்தார். ’இதை நாங்களே பண்ணுவோம்ல’ என்று கணபதி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ஊருக்கு வந்து நண்பர்களிடம் கொஞ்சம் பணம் புரட்டிக்கொண்டு, தனது சகோதரர்களையும் தன்னுடன் அழைத்து கொண்டு திரும்ப பம்பாய் வந்தார். ஒரு கைவண்டியை வாடகைக்கு எடுத்து, அதில் சாப்பாட்டுக்கடை போட்டார்.
சுத்தம். வகை வகையா சுவை. இதில் தான் முழு கவனத்தையும் செலுத்தினார். வீட்டில் அம்மா எப்படி சமைப்பாரோ, அதை போல் சமைத்தார். மசாலாவை ஊரில் இருந்தே கொண்டு வந்தார். பாம்பேக்கு அந்த சுவை வித்தியாசமாக இருக்க, கூட்டம் கூடியது. அப்போது கணபதி தங்கியிருந்தது, சில மாணவர்களுடன். நட்புடன் பழகிய அவர்கள், கணபதிக்கு ரூமில் கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்க, இணையத்தில் உலவவும் தெரிந்துக்கொண்டார். மெக் டொனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் பற்றியெல்லாம் பார்த்தார். படித்தார். வருடங்கள் ஓட, அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்தார். அவருடைய அன்றைய நிலைக்கு பெரிய ஸ்டெப்.
ஐம்பதாயிரம் அட்வான்ஸ், ஐந்தாயிரம் வாடகை கொடுத்து, ’ப்ரேம் சாகர் தோசா ப்ளாஸா’ என்று ஒரு கடையை ஆரம்பித்தார். விதவிதமாக தோசையை சுட்டு விற்றார். விற்று தீர்ந்தது. கூடவே, சைனீஸ் ஐட்டங்களையும் போட்டார். ஆனால், அது போணியாகவில்லை. இருந்தும், விடவில்லை. அந்த ஸ்டைலில் தோசையை சுட்டார். மெகா ஹிட்.

செஸ்வான் தோசை, ஸ்ப்ரிங் ரோல் தோசை என்று மெனு களைக்கட்ட, கல்லாவும் களைக்கட்டியது. பேரும் புகழும் பரவியது. ‘தோசா ப்ளாஸா’ என்பது அந்த வட்டாரத்தில் பிரபல ப்ராண்டானது. ‘தோசா ப்ளாஸா’ என்று சும்மா இவர் பெயர் வைத்துவிடவில்லை. பிஸ்ஸா ஹட், கோக்க கோலா போன்ற பெயர்களை கவனமாக பார்த்து, ஆராய்ந்து இந்த பெயரை வைத்தார். ஒரு ஷாப்பிங் மால் கட்டியவர்கள், இவரை கடை போட அழைத்தார்கள். இவரும் கடை திறந்தார். இன்னொரு ஷாப்பிங் மாலில், ‘தோசா ப்ளாஸா’ என்ற பெயரில் இன்னொருவர் கடை திறக்க உரிமம் கொடுத்தார். வியாபார அடையாளத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். ‘டாக்டர். டி அங்கீகரித்தது’ (Approved by Doctor. D) என்பது லோகோவானது. தற்போது குறைந்தபட்சம் பத்து லட்சம் இருந்தா தான், ஆட்டத்துக்கே சேர்த்துக்கொள்கிறார்.

இப்ப, இதுவரை 35 கடைகள் திறந்துவிட்டார். நியூசிலாந்திலும் ‘தோசா பிளாஸா’ இருக்கிறது. அடுத்து அமெரிக்காவிலும், துபாயிலும் கடை போட போகிறார். ஒரு யூனிவர்சிட்டியில் இவருடைய கடை பற்றிய பாடம் இருக்கிறது. மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு வந்திருக்கிறார். முன்னாள் நியூசி பிரதமர், சேவாக், லதா ரஜினிகாந்த் ஆகியோர் இவர் கடை கஸ்டமர்கள். ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு இவரை அழைத்திருக்கிறார். அனிதா கிருஷ்ணமூர்த்தி எழுதி, அப்துல் கலாம் வெளியிட்ட “மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு” புத்தகத்தில் இவரும் இருக்கிறார்.
---
“உங்கள பாம்பேயில தனியா விட்டுட்டு போன அந்த பையனை நினைப்பதுண்டா?” என்ற கேள்விக்கு,
”நான் இந்த நிலையில் இருக்குறேன்னா, அதுக்கு காரணம் அவன் தான். எங்கிருக்கிறானோ அவன்?” என்று தன்னை கைவிட்டவனையும் நன்றி கூர்கிறார். தமிழன் என்பதால் கேவலப்பட்டது, ரோட்டோர கடையால் போலீஸ் பிரச்சினையை சந்தித்தது போன்றவையை தாண்டி, இன்று தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்.
எம்பிஏ போல் எதுவும் படிக்காமல், இந்த நிலைக்கு எம்பியே வந்திருக்கும் ப்ரேம் கணபதி மேலும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்.
Source
http://www.saravanakumaran.com/2010/09/blog-post_15.html
Labels:
சுய முன்னேற்றம்
Wednesday, September 15, 2010
இப்பவே கண்ணை கட்டுதே
என்ன சோதனை என்ன சோதனை. சாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டகலாம் தான் போலும் ? சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி
இதுங்க ரெண்டு சாமிக்கு சைடில் உட்கார்ந்து பேசுவது போதாது என்று பின்னாடி ஒண்ணு முதுகில் மைதானம் காட்டிக்கொண்டு போகின்றது பாருங்கள் !
ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் எதையும் பார்க்காதது போல் பாசாங்கு செய்வது !
தில்லுமுல்லு படத்தில் நேர்முக தேர்வு வருபவர் - வேண்டாம் ரிஸ்க், கொஞ்சம் கஸ்டப்படும் என்று சொல்லுவது போல், வடிவேலு - "இப்பவே கண்ணை கட்டுதே" என்று சொல்லுவது போல்.
ஏதோ கையில் இந்த தடி இருந்ததால் பிழைத்தது !!
பதிவு செய்தவர்
http://tamizhkirukkan.blogspot.com/2010/04/blog-post_1795.ஹ்த்ம்ல்
Labels:
இளைப்பாற
Monday, September 13, 2010
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு டெராப்யூஜியாஸ் நிறுவனம் அறிமுகம்
சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.
இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.
அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.
இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.
அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Labels:
தகவல்
24.9.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்
குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.
தேதி : 24.9.2020
1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு
2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு
4. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.
5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.
6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.
8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.
9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.
10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.
11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.
12. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.
13. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.
14. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.
15. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.
16. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.
17. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.
18. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
19. பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு
20. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.
21. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
22. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.
23. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.
24. அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.
25. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.
பதிவு செய்தவர்
http://joke25.blogspot.com/2010/08/2492020.html
தேதி : 24.9.2020
1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு
2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு
4. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.
5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.
6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.
8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.
9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.
10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.
11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.
12. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.
13. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.
14. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.
15. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.
16. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.
17. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.
18. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
19. பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு
20. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.
21. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
22. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.
23. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.
24. அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.
25. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.
பதிவு செய்தவர்
http://joke25.blogspot.com/2010/08/2492020.html
Labels:
இளைப்பாற
Subscribe to:
Posts (Atom)




