Saturday, September 10, 2011

காணாமலே போகட்டும் இந்தச் சேனல்கள்...

தமிழகத்தில் இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படுவது அரசு கேபிள் தொலைக்காட்சி பற்றித்தான். நாட்டில் எண்ணற்ற பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாலை ஆறு மணி ஆனதும் இல்லத்தரசிகள், இளைஞர்கள், ஆண்களும்கூட தாங்கள் விரும்பும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்க்காவிட்டால் அன்று இரவு தூங்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு, பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இது மகிழ்ச்சி தரும் செய்திதான்.

ஆனால், இந்தக் கேபிள் ஒளிபரப்பு தொடங்கியதும், பெண்கள் பட்டபாடு இவ்வளவுதான் என்று சொல்லி மாளாது. ஏனென்றால், "எங்க டி.வி.யில் இந்தத் தனியார் சேனல் தெரியவில்லை, அந்தச் சேனல் தெரியவில்லை' என்று மளிகைக் கடைகளிலும், வீதிகளிலும், குடிநீர் பிடிக்கும்போதும் மாறிமாறி நலம் விசாரிப்பதுபோல, டி.வி. சேனல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இது மட்டுமல்ல, "அய்யோ, இந்த சீரியலில் அந்தக் காட்சிக்கு பின் என்ன ஆகுமோ. அந்தச் சேனலில் அவருக்கும் அவளுக்கும் விவாகரத்து நடக்குமோ, நடக்காதோ, திருமணம் நடக்குமோ, நடக்காதோ' என்று தனது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டுவார்களோ, அதைவிட அதிகம் என்றுதான் கூற வேண்டும்.

இது மட்டுமல்ல, பிற மாவட்டத்தில் இருக்கும் தங்களது தோழிகளிடமும், உறவினர்களிடமும் செல்போனில் தொடர்புகொண்டு, "எங்கள் பகுதியில் இந்தச் சேனல்கள் தெரிவதில்லை, உங்கள் பகுதியில் அனைத்துச் சேனல்களும் தெரிகிறதா?' என்று கேட்பதும், அப்படி சேனல்கள் ஒளிபரப்பு ஆகிறது என்றால், அந்தச் சேனல்களில் வரும் சீரியலைப் பற்றி விசாரிப்பதையும் தவிர்க்கவில்லை.

அட, இந்தப் பிரபல சேனல் தெரியவில்லையே. இனி என்ன செய்வது? மேலும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, சீசன் 1, சீசன் 2, சீசன் 3 என்ற சேனல்களின் குரலை இனி கேட்க முடியாதே.

எவ்வளவோ கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புப் பெற்று, கஞ்சியும் கூழும் குடித்து, மழையிலும் வெயிலிலும் அலைந்து எடுக்கப்பட்ட படங்களைக் குறைந்த விலைக்கு வாங்கியும், தர மறுப்பவர்களை மிரட்டியும் திருவிழா நாள்களில் புதுத் திரைப்படங்களை ஒளிபரப்பி நம்மைச் சந்தோஷப்படுத்திய சேனல்கள் இனி வருமோ? வராதோ? என்று புலம்பித் தள்ளுகின்றனர் பெண்கள், இளைஞர்கள்.

ஏன் இந்த மனக்குமுறல்? அப்படி என்ன கிடைக்கப் போகிறது இந்தச் சேனல்களால் என்ற கேள்விகளை இவர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை அளிக்கும் வகையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சிறப்பானது, பாராட்டுக்குரியது.

குறிப்பிட்ட தனியார் சேனல்களைத் தடை செய்வதால் நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. அதில் முதலாவது, கல்வித் தரம்.

இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் மாணவர்களில் பலர் மாலையில் ஆறு மணிக்கு மேல் தொலைக்காட்சி சீரியல்களையும், பிற நிகழ்ச்சிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்குகின்றனர்.

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, படித்த பெற்றோர்கூட முறையாகக் கவனிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சீரியல் தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாகக் குழந்தைகளை மிரட்டி, உருட்டி கற்றுக் கொடுக்கும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது. எனவே, இப்போது தடை செய்யப்பட்டிருக்கும் சேனல்களை நிரந்தரமாகத் தடை செய்தால் நம்நாட்டில் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக உயரும், குழந்தைகளுக்கு நிரந்தர அன்பும் கிடைக்கும் என்பது உறுதி.

இரண்டாவதாக, செய்தித்தாள் மற்றும் புத்தகம் வாசிப்போர் அதிகரிப்பர். கேபிள் தொலைக்காட்சிகள் வளர்ச்சி அடைந்த பின்னர் மக்களிடம் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. ஏன் செய்தித்தாள்களைக்கூட படிக்க முன்வருவதில்லை. எனவே, மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் இனி புத்தகங்களை வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தைவிட சீரியல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், மனஅழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் அதிகம்.

மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒன்றுகூட நல்வழிப் படுத்துபவையாக இல்லை. கணவன்- மனைவி உறவு, மாமனார் மாமியார் மற்றும் உறவினர்களுடன் நல்ல அணுகுமுறையும் இந்த சீரியல்களால் மாறி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் கணவன் அலுவலகத்தில் இருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்தால், அவரிடம் முகம்கொடுத்துப் பேசாமலும், டீ, காபி கூட போட்டுத் தராத மனைவியர் இருக்கிறார்கள். இரவு நேரத்தில் வீட்டுக்கு உறவினர்கள் வருவதையே விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மாற்ற இந்த நடவடிக்கை தேவை.

எனவே, குடும்பம் ஒரு கோவில் என்று கூறுவதுபோல குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழவும், இன்றைய இளைய தலைமுறைக்கு நல்வழி காட்டும் வகையிலும், தமிழக மக்களை ஆட்டிப்படைத்த சில சேனல்கள் இல்லாமல் இருந்தாலே குடும்பத்தில் சந்தோஷம் பெருகும், நல்லது நடக்கும்.

நன்றி தினமணி

Monday, January 3, 2011

ராக்கெட் தோல்விக்கு யார் காரணம்?

செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.

1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.

இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது, நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.

ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.

இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது.

மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.

லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.

நன்றி தினமணி

Tuesday, November 30, 2010

Wednesday, November 17, 2010

Airtel அடித்த முதல் ஸ்பெக்ட்ரம் கொள்ளை!!

பிரமோத் மகாஜன் தொலை தொடர்பு மந்திரியாக பிஜேபி ஆட்சியில் இருந்த போது என்ன முறை பின் பற்ற பட்டதோ அதே முறைதான் இப்போது பின்பற்றப்பட்டுள்ளது..என கலைஞர் திருவாய் மலர்ந்துள்ளார்...அது என்ன முறை...?

2ஜி அலைவரிசை முதன் முதலில் ஒதுக்கப்பட்டபோது airtel பிரமோத் மகாஜனை அணுகியது..போட்டியில்லாமல் எங்களுக்கே அலைவரிசையை கொடுத்து விடுங்கள்..வருடத்திற்க்கு 300 கோடி என எடுத்துக்கொள்கிறோம்...என கேட்டது...பிரமோத் தும் அள்ளி கொடுத்தார்

2021 வரை இந்த லைசன்ஸ்உரிமை செல்லும்..இதற்கு கைமாறாக பிரமோத்துக்கு 5000 கோடி கொடுக்கப்பட்டது...airtel life time ல் 2021 என வரும்..பார்த்திருப்பீருப்பீர்கள்..அது அதன் லைசன்ஸ் காலத்தை குறிக்கிறது.
அதே 3ஜி அலைவரிசையை இப்போது அதெ கம்பெனி 30,000 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என்றால் airtel அடித்த கொள்ளை எவ்வளவு என கணக்கு போட்டு பாருங்கள்..இது வருடம் ஒன்றிற்கு மட்டுமே..airtel மளமள வென முன்னேறி இந்தியாவின் தொலை தொடர்பில் முதலிடத்தில் பிடிக்க இது ஒரு முக்கிய காரணம்...

5000 கோடி அவர் வாங்கியது அனைத்து மீடியாவிற்க்கும் தெரியும் ...எதிர்கட்சியாய் இருந்த காங்கிரஸ்க்கும் தெரியும்..போபர்ஸ் ஊழல் பற்றி பிஜேபி மீண்டும் மீண்டும் ஊதி பெரிதாக்கி காங்கிரசை பிஜேபி முடக்கி வைத்திருந்த காலம் அது...அப்போது காங்கிரஸ் வாய் மூடி நின்ற பலனை இன்று அனுபவிக்கிறது..காங்கிரஸ் ..அன்று சும்மா இருந்த மீடியாக்களும் இன்று ஸ்பெக்ட்ரமை ஊதி பெரிதாக்குவதின் காரணம் வட இந்திய மீடியாக்கள் கலைஞரை வெறுப்பதே காரணம்...

பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்பவர் ..20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை பெற்றவர் என்பதால்...வட இந்திய மீடியாக்களும்..வட இந்திய எம்.பி க்களும்..சில காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க வை ஒழிக்க முயற்சிக்கின்றன..அதற்கு அல்வாவாக கிடைத்ததுதான் ராசா மேட்டர்
இன்றும் கூட..சூத்திரனுக்கு ஒரு மரியாதை ..பார்பனுக்கு ஒரு மரியாதையோ என பாரதியின் வரிகளை எடுத்துப்போட்டு ஜெயலலிதாவை வறுத்து எடுத்திருக்கிறார் கலைஞர்..இது போன்ற அறிக்கைகளால்தான்..,பார்ப்பன பத்திரிக்கைகளான..இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஜூனியர் விகடன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை ஸ்பெக்ட்ரமை செமையாக ஊதின...தி.மு.க வின் இமேஜை காலி செய்தன.ஜுனியர் விகடன் மட்டும் 2007 முதல் 12 கவர் ஸ்டோரிகள் ஸ்பெக்ட்ரம் பற்றி வெளியிட்டுள்ளன..

ராசா பிரமோத் போல அடித்திருந்தால் பரவாயில்லை...ஆனால் இந்த மனுசன் மனைவியின் பினாமி பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து ...அதற்கு லைசன்ஸ் கொடுத்து அது பங்குகளை வெளியிட வைத்து எதிர்காலத்தில் டவர்கள் அமைத்து சிம் கொடுத்து வியாபாரம் செஞ்சி..வருசம் பத்தாயிரம்,இருபதாயிரம் கோடிகள் லாபம் கிடைக்கும் படி செய்யலாம்னு நினைச்சார் போல....இந்த அகலகால் காலை வாரி விட்டது.

ராசா பிரமோத் போல நேரிடையாக பணம் அள்ளவில்லை..1,70,000 கோடி மொத்தமாக அவர் அடிக்கவில்லை என்பது மீடியாக்களுக்கு நன்கு தெரியும்..ஆனாலும் அதை பற்றி முச்சு விடவில்லை..அவ்வளவு பணத்தையும் அவரே ஊழல் செய்து சென்னைக்கு கொண்டு வந்து விட்டார் என்பதை போலவே மாயத்தோற்றம் எழுப்புகின்றன...மீடியா என்பது தனி அரசாங்கம்..தனி சிஐடி பிரிவு போல..எப்போதோ மாறி விட்டது...அவை நினைத்தால் யாரையும் கவிழ்க்க முடியும் என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம்....

ராசாவுக்காக கனிமொழி மட்டுமே எல்லோரிடமும் கடைசி வரை சமாதானம் செய்தாராம் ...தந்தையிடம் கெஞ்சினாராம்..ஆனாலும் உதட்டை பிதுக்கி விட்டாராம் கலைஞர்..பாவம் கனி.
.
ராசா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள.....
பிரமோத் 5000 கோடி அடித்து விட்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்....அவரது உருப்படாத தம்பி வருகிறார்..அண்ணா நீதான் 5000 கோடி அடித்து விட்டாயே, எனக்கு ஒரு 50 கோடி கொடு.. நான் தனியாக பிசினஸ் செய்கிறேன்..என்றாராம்...

பிரமோத் கோபத்துடன்,அதெல்லாம் உனக்கு ஒத்து வராது..ரிலையன்ஸ் கிட்ட சொல்லி இருக்கேன்..மேனேஜர் வேலை போட்டு தருவாங்க..மாசம் 40,000 ரூபா சம்பளம் தர சொல்லி இருக்கேன்..ஒரு ஃப்ளாட் வாங்கி தரேன்..போய் ஒழுங்கா வேலை செஞ்சிட்டு இரு என்றாராம்..

தம்பி உடனே துப்பாக்கி எடுத்து 5000 கோடி சம்பாதிச்சும், உன் கஞ்சத்தனம் போகலையே என்ற்படியே சுட்டாராம்..
மொத்தம் பத்து குண்டுகள்...
கொழுந்தனுக்கு காபி தயாரித்து சூடாக கொண்டு வந்த பிரமோத் மனைவியிடம்,,
பாருங்க அண்ணி என்னை வேலைக்கு போக சொல்றாரு..இந்த மயிரு வேலைக்கு எனக்கு போக தெரியாதா..இவர் இவ்வளவு பணம் வெச்சிருந்தும் நான் வேலைக்கு போகணுமாம்..அதான் சுட்டேன்...என்றாராம் கூலாக..


சிவன் சொத்து குல நாசம்...இந்தியா ஆன்மீக பூமி...மக்கள் வரிப்பணம் என்பது..சிவன் சொத்து..அதை கொள்ளை அடிப்பவர்கள் யாராய் இருந்தாலும் அகால மரணமடைவார்கள்..அல்லது அவரது வாரிசுகள் பதவிக்காக சண்டை போட்டு மண்டை உடைத்துக்கொள்வதை பார்த்துக்கொண்டே நெஞ்சை பிடித்துக்கொண்டு அய்யோ கொல்றாங்களே என்றபடியே சாவார்கள்..

Thanks
http://sathish777.blogspot.com/2010/11/airtel.html

Thursday, October 28, 2010

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ளன செல்போன் கம்பனிகள்

செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதியை நமது TRAI அடுத்த மாதம் துவங்கபோவதாக அறிவித்துள்ளது. பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த MNP ( மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ) முறை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது . இந்த வசதியின் மூலம் நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.
மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


செல்போன் கம்பனிகள் அறிவித்துள்ள தேதி விபரங்கள்
Nov 8th -: Bharti Airtel, Videocon, Loop Mobile

Nov 11th –: Aircel, Uninor, Reliance GSM ( Rcom) and Tata Docomo

Nov 14th-: BSNL ,MTS, Idea Cellular and BSNL CDMA

Nov 17th-: Vodafone Essar, Reliance Mobile (CDMA) and Tata indicom.

இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும்.

3G வசதியை வரும் தீபாவளிக்கு தரப்போவதாக டாட்டா -டோகோமோவும் ,டிசம்பரில் தரப்போவதாக ஏர்டேல்லும் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.

Thanks
http://erodethangadurai.blogspot.com/2010/10/blog-post_25.html

Thursday, October 21, 2010

கல்வி எதற்காக?

கல்வி எதற்காக?

கட்டுக்குள் அடக்காதே !!!


காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.

‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால் காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.

காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம் இல்லாமல் இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார். அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில் உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம் ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...

இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல் சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...

நன்றி குரு
http://rkguru.blogspot.com/2010/10/blog-post.html