Tuesday, November 30, 2010

தமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்

Wednesday, November 17, 2010

Airtel அடித்த முதல் ஸ்பெக்ட்ரம் கொள்ளை!!

பிரமோத் மகாஜன் தொலை தொடர்பு மந்திரியாக பிஜேபி ஆட்சியில் இருந்த போது என்ன முறை பின் பற்ற பட்டதோ அதே முறைதான் இப்போது பின்பற்றப்பட்டுள்ளது..என கலைஞர் திருவாய் மலர்ந்துள்ளார்...அது என்ன முறை...?

2ஜி அலைவரிசை முதன் முதலில் ஒதுக்கப்பட்டபோது airtel பிரமோத் மகாஜனை அணுகியது..போட்டியில்லாமல் எங்களுக்கே அலைவரிசையை கொடுத்து விடுங்கள்..வருடத்திற்க்கு 300 கோடி என எடுத்துக்கொள்கிறோம்...என கேட்டது...பிரமோத் தும் அள்ளி கொடுத்தார்

2021 வரை இந்த லைசன்ஸ்உரிமை செல்லும்..இதற்கு கைமாறாக பிரமோத்துக்கு 5000 கோடி கொடுக்கப்பட்டது...airtel life time ல் 2021 என வரும்..பார்த்திருப்பீருப்பீர்கள்..அது அதன் லைசன்ஸ் காலத்தை குறிக்கிறது.
அதே 3ஜி அலைவரிசையை இப்போது அதெ கம்பெனி 30,000 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என்றால் airtel அடித்த கொள்ளை எவ்வளவு என கணக்கு போட்டு பாருங்கள்..இது வருடம் ஒன்றிற்கு மட்டுமே..airtel மளமள வென முன்னேறி இந்தியாவின் தொலை தொடர்பில் முதலிடத்தில் பிடிக்க இது ஒரு முக்கிய காரணம்...

5000 கோடி அவர் வாங்கியது அனைத்து மீடியாவிற்க்கும் தெரியும் ...எதிர்கட்சியாய் இருந்த காங்கிரஸ்க்கும் தெரியும்..போபர்ஸ் ஊழல் பற்றி பிஜேபி மீண்டும் மீண்டும் ஊதி பெரிதாக்கி காங்கிரசை பிஜேபி முடக்கி வைத்திருந்த காலம் அது...அப்போது காங்கிரஸ் வாய் மூடி நின்ற பலனை இன்று அனுபவிக்கிறது..காங்கிரஸ் ..அன்று சும்மா இருந்த மீடியாக்களும் இன்று ஸ்பெக்ட்ரமை ஊதி பெரிதாக்குவதின் காரணம் வட இந்திய மீடியாக்கள் கலைஞரை வெறுப்பதே காரணம்...

பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்பவர் ..20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை பெற்றவர் என்பதால்...வட இந்திய மீடியாக்களும்..வட இந்திய எம்.பி க்களும்..சில காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க வை ஒழிக்க முயற்சிக்கின்றன..அதற்கு அல்வாவாக கிடைத்ததுதான் ராசா மேட்டர்
இன்றும் கூட..சூத்திரனுக்கு ஒரு மரியாதை ..பார்பனுக்கு ஒரு மரியாதையோ என பாரதியின் வரிகளை எடுத்துப்போட்டு ஜெயலலிதாவை வறுத்து எடுத்திருக்கிறார் கலைஞர்..இது போன்ற அறிக்கைகளால்தான்..,பார்ப்பன பத்திரிக்கைகளான..இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஜூனியர் விகடன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை ஸ்பெக்ட்ரமை செமையாக ஊதின...தி.மு.க வின் இமேஜை காலி செய்தன.ஜுனியர் விகடன் மட்டும் 2007 முதல் 12 கவர் ஸ்டோரிகள் ஸ்பெக்ட்ரம் பற்றி வெளியிட்டுள்ளன..

ராசா பிரமோத் போல அடித்திருந்தால் பரவாயில்லை...ஆனால் இந்த மனுசன் மனைவியின் பினாமி பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து ...அதற்கு லைசன்ஸ் கொடுத்து அது பங்குகளை வெளியிட வைத்து எதிர்காலத்தில் டவர்கள் அமைத்து சிம் கொடுத்து வியாபாரம் செஞ்சி..வருசம் பத்தாயிரம்,இருபதாயிரம் கோடிகள் லாபம் கிடைக்கும் படி செய்யலாம்னு நினைச்சார் போல....இந்த அகலகால் காலை வாரி விட்டது.

ராசா பிரமோத் போல நேரிடையாக பணம் அள்ளவில்லை..1,70,000 கோடி மொத்தமாக அவர் அடிக்கவில்லை என்பது மீடியாக்களுக்கு நன்கு தெரியும்..ஆனாலும் அதை பற்றி முச்சு விடவில்லை..அவ்வளவு பணத்தையும் அவரே ஊழல் செய்து சென்னைக்கு கொண்டு வந்து விட்டார் என்பதை போலவே மாயத்தோற்றம் எழுப்புகின்றன...மீடியா என்பது தனி அரசாங்கம்..தனி சிஐடி பிரிவு போல..எப்போதோ மாறி விட்டது...அவை நினைத்தால் யாரையும் கவிழ்க்க முடியும் என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம்....

ராசாவுக்காக கனிமொழி மட்டுமே எல்லோரிடமும் கடைசி வரை சமாதானம் செய்தாராம் ...தந்தையிடம் கெஞ்சினாராம்..ஆனாலும் உதட்டை பிதுக்கி விட்டாராம் கலைஞர்..பாவம் கனி.
.
ராசா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள.....
பிரமோத் 5000 கோடி அடித்து விட்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்....அவரது உருப்படாத தம்பி வருகிறார்..அண்ணா நீதான் 5000 கோடி அடித்து விட்டாயே, எனக்கு ஒரு 50 கோடி கொடு.. நான் தனியாக பிசினஸ் செய்கிறேன்..என்றாராம்...

பிரமோத் கோபத்துடன்,அதெல்லாம் உனக்கு ஒத்து வராது..ரிலையன்ஸ் கிட்ட சொல்லி இருக்கேன்..மேனேஜர் வேலை போட்டு தருவாங்க..மாசம் 40,000 ரூபா சம்பளம் தர சொல்லி இருக்கேன்..ஒரு ஃப்ளாட் வாங்கி தரேன்..போய் ஒழுங்கா வேலை செஞ்சிட்டு இரு என்றாராம்..

தம்பி உடனே துப்பாக்கி எடுத்து 5000 கோடி சம்பாதிச்சும், உன் கஞ்சத்தனம் போகலையே என்ற்படியே சுட்டாராம்..
மொத்தம் பத்து குண்டுகள்...
கொழுந்தனுக்கு காபி தயாரித்து சூடாக கொண்டு வந்த பிரமோத் மனைவியிடம்,,
பாருங்க அண்ணி என்னை வேலைக்கு போக சொல்றாரு..இந்த மயிரு வேலைக்கு எனக்கு போக தெரியாதா..இவர் இவ்வளவு பணம் வெச்சிருந்தும் நான் வேலைக்கு போகணுமாம்..அதான் சுட்டேன்...என்றாராம் கூலாக..


சிவன் சொத்து குல நாசம்...இந்தியா ஆன்மீக பூமி...மக்கள் வரிப்பணம் என்பது..சிவன் சொத்து..அதை கொள்ளை அடிப்பவர்கள் யாராய் இருந்தாலும் அகால மரணமடைவார்கள்..அல்லது அவரது வாரிசுகள் பதவிக்காக சண்டை போட்டு மண்டை உடைத்துக்கொள்வதை பார்த்துக்கொண்டே நெஞ்சை பிடித்துக்கொண்டு அய்யோ கொல்றாங்களே என்றபடியே சாவார்கள்..

Thanks
http://sathish777.blogspot.com/2010/11/airtel.html

Thursday, October 28, 2010

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ளன செல்போன் கம்பனிகள்

செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதியை நமது TRAI அடுத்த மாதம் துவங்கபோவதாக அறிவித்துள்ளது. பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த MNP ( மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ) முறை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது . இந்த வசதியின் மூலம் நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.
மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


செல்போன் கம்பனிகள் அறிவித்துள்ள தேதி விபரங்கள்
Nov 8th -: Bharti Airtel, Videocon, Loop Mobile

Nov 11th –: Aircel, Uninor, Reliance GSM ( Rcom) and Tata Docomo

Nov 14th-: BSNL ,MTS, Idea Cellular and BSNL CDMA

Nov 17th-: Vodafone Essar, Reliance Mobile (CDMA) and Tata indicom.

இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும்.

3G வசதியை வரும் தீபாவளிக்கு தரப்போவதாக டாட்டா -டோகோமோவும் ,டிசம்பரில் தரப்போவதாக ஏர்டேல்லும் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.

Thanks
http://erodethangadurai.blogspot.com/2010/10/blog-post_25.html

Thursday, October 21, 2010

கல்வி எதற்காக?

கல்வி எதற்காக?

கட்டுக்குள் அடக்காதே !!!


காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.

‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால் காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.

காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம் இல்லாமல் இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார். அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில் உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம் ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...

இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல் சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...

நன்றி குரு
http://rkguru.blogspot.com/2010/10/blog-post.html

வெள்ளிவிழா வாழ்த்துகள்!(தூத்துக்குடி)

ஓன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிந்து தூத்துக்குடி தனி மாவட்டமாகி, 20.10.2010 அன்று வெள்ளி விழா கொண்டாடுகிறது. இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இருந்து, ஆறு ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, பன்னிரெண்டு ஒன்றியங்கள் உள்ள இந்த மாவட்டம் இடைக்காலத்தில் சிதம்பரனார் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. வீரம் செறிந்த இந்த மாவட்டம் மானாவாரி கரிசல் மண், தாமிரபரணி பாயும் தீரவாசம், தேரிக்காடுகள், கடற்கரைப் பகுதி என பல புவியியல் அமைப்புகளைக் கொண்டது. பொதிகை, தாமிரபரணியின் நதி மூலம் ஆகி, இம்மாவட்டத்தின் உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. இங்கு கட்டபொம்மன், தீரன் சுந்தரலிங்கம், ஊமைத்துரை, வெள்ளையத் தேவன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சி., உமறுப்புலவர் போன்ற ஆளுமைகள் உலவினர். காட்டிக் கொடுத்தவர் என்ற ஏளனப் பேச்சுக்கு ஆளாகிவிட்டவர் என்றாலும், எட்டயபுரம் ராஜா குடும்பத்தினர் தமிழுக்கும், தமிழிசைக்கும் தொண்டாற்றியதை மறக்க முடியாது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியத் தாக்கத்தால் ஆங்கிலேய அரசை எதிர்த்து உப்பளத் தொழிலாளர்கள் குலசேகரப் பட்டினத்திலிருந்து உடன்குடி வரை உள்ள தந்திக் கம்பங்களை வெட்டி அழித்து, ஆங்கில உப்பள கண்காணிப்பாளர் லோனை வெட்டிச் சாகடித்தனர். லோன் கொலை வழக்கு எனப்பட்ட அவ்வழக்கில் பல தியாகிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பூச்சிக்காடு கள்ளுக்கடை, மாவடி பண்ணை வழக்குகளிலும் ஆங்கிலேயர்களால் பலர் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். இம்மாவட்டம் விடுதலை வேள்வியில் ஆர்த்து எழுந்தது. புனித சவேரியர், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் இம்மண்ணில் அருந்தொண்டுகள் செய்தனர். உமறுப் புலவர், சீதக்காதி, சதக்கதுல்லா அப்பா, காசிம் புலவர் போன்றோர் இஸ்லாமிய மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர், ஆழ்வார் திருநகரில் வாழ்ந்த நம்மாழ்வார் போன்றோர்களுடைய தமிழ்ப்பணி மறக்க முடியாது. குமரகுருபரர் காசிக்குச் சென்றபொழுது ஒளரங்கசீப் இவரைப் பாராட்டி தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது, குமரகுருபரர் காசியில் இந்துக்களுக்கு மடம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஒளரங்கசீப் அதனை ஏற்று மடம் அமைத்துக் கொடுத்தார். அம்மடத்துக்கு இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் வரவேண்டும் என குமரகுருபரர் சொல்லியது வரலாற்றுச் செய்தியாகும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த கொற்கை துறைமுகம், சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களின் ஆட்சிகளில் பல்வேறு காலகட்டங்களில் இருந்துள்ளது. கொற்கை முத்தை உலக அழகி கிளியோபாட்ரா அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் கொற்கைத் முத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கொற்கையிலிருந்து மிளகு, ஏலம், கிராம்பு போன்ற பல பொருள்களை யவனர்கள் கொண்டு சென்றனர். இங்கு அராபிய, சீன, ரோம நாட்டு காசுகளும், கோப்பைகள், பீங்கான்கள், மதுபாட்டில்கள் போன்றவை கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சி அறிஞர் சாத்தான்குளம் அ.ராகவன் கூறுகிறார். கொற்கையை ஆரவாரமிக்கது என்று அகநானூறு குறிப்பிடுகிறது. இக்கடற்கரையின் அழகை ஐங்குறுநூறு பாடுகிறது. சிலம்பில் சொல்லப்பட்ட கொற்கைப் பரல்கள் ஆங்கிலத்தில் பியர்ல்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் இந்த முத்துக்கள் ரஷ்ய காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளன. பிளினி இங்கு நடைபெறும் வியாபாரத்தைப் பற்றி விரிவாகச் சொல்கிறார். பழைய காயலும் கொற்கைக்குப் பின் பிரசித்தி பெற்றது. பின்னர் தூத்துக்குடி துறைமுக நகரமாக மாறியது. 16-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களுக்கும், போர்த்துகீசியர்களுக்கும் வியாபாரப் போட்டி நடந்தது. டச்சுக்காரர்களின் கண்களில் தூத்துக்குடி பட்டதும் அதைக் கைப்பற்றினர். பிற்காலத்தில் வணிக கேந்திரமாகப் பல்வேறு மேலை நாட்டினருக்கு விளங்கியது. தூத்துக்குடி என்றால், மணல் தூற்றி நிரவப்பட்டது என்பது பொருள். பருத்தி மார்க்கெட் தூத்துக்குடியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததால் கோரல் மில் போன்ற நெசவாலைகளும் இங்கு அமைந்தன. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரத்திலிருந்து மாட்டு வண்டிகளில் பருத்திகள் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதற்காக இன்றைக்கும் இருக்கிற கிரேட் காட்டன் ரோடு 1940-ல் அமைக்கப்பட்டதாக எச்.ஆர். பேட் ஐ.சி.எஸ். குறிப்பிடுகிறார். வ.உ.சிதம்பரனாரின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, தூத்துக்குடி பீச் ரோடு 4-ம் எண் கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது. வெள்ளையரை எதிர்த்து விடுதலை உணர்வை வளர்ப்பதற்கு, வ.உ.சி., கிழக்கு அலை கடலின் நடுவில் கப்பலைச் செலுத்தினார். அச்சமயம் ஆங்கிலேயர் தூங்குவதற்கு அஞ்சி, நடுக்கடலில் படகில் தூங்கினர். 1908 மார்ச் 13-ம் நாள் தூத்துக்குடியில் கிளர்ந்தெழுந்த போராட்டம் ஆங்கிலேயர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனால் தேவையற்ற வகையில் ஆங்கிலேயர்கள் விடுதலை வீரர்களைக் கைது செய்து பல கலகங்கள் உருவாகின. அதில் திருநெல்வேலி கலகம் குறிப்பிடத்தக்கது. விபின் சந்திர பாலரின் கைதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த இந்த நெல்லை கலவரத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்த சரித்திரம் தமிழகத்தின் நினைவுகளிலிருந்து அழிக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள். அண்ணல் காந்தி தூத்துக்குடிக்கு இருமுறை வந்தார். ஒருமுறை சிதம்பரனார் சிறையிலிருந்தபொழுது அவரைப் பற்றி கூட்டத்தில் காந்தி பேசினார். 1927-ல் இரண்டாம் முறையாக தூத்துக்குடிக்கு வந்த காந்தி, தியாகி விஸ்வநாததாஸின் தேசியப் பாடலைக் கேட்டு கைதட்டி ரசித்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தமிழ் கற்க பலமுறை முயற்சி செய்ததாகவும், தமிழினுடைய தொன்மையும், சிறப்பையும் அறிந்து பிரமித்துள்ளதாகவும், திருக்குறளில் சொல்லப்பட்ட அபூர்வ கருத்துகள் தன் கவனத்தை ஈர்த்தது என்றும் கூறினார். தமிழையும், திருக்குறள் மூலத்தையும் படிக்க வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் உள்ளது. இதனைக் கற்க ஆண்டவன் வாய்ப்பு அளிக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது என்று தூத்துக்குடியில் பேசினார். கல்கி அமைத்த எட்டயபுரம் பாரதி மண்டபம், வெள்ளை மாளிகை போன்று இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட நன்கொடையிலிருந்து, தன்னுடைய தலையாய பணியாக பாரதி மண்டபத்தை அமைத்தார் கல்கி. அந்நிகழ்ச்சியைப் பற்றி கல்கி குறிப்பிடும்பொழுது- ""எட்டயபுரம் கரிசல் மண். மழை பெய்தால் சேறாகி விடும். அன்றைய மராமத்து அமைச்சர் பக்தவத்சலம் உதவியால் சாலைகள் சீரமமைக்கப்பட்டன. திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ஏ.பி.சி.வீரபாகு, வீரத்தியாகி ஸ்ரீ சோமயாஜுலு, காரைக்குடி கம்பன் கழகத் தலைவர் சா.கணேசன் ஆகியோர் பாரதி மண்டப திறப்பு விழாவுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்தனர். மேற்கு வங்க கவர்னர் ராஜாஜி, சென்னை மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் பாரதி ஸ்பெஷல் ரயில் மூலம் சென்னையிலிருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்தனர். திறப்பு விழாவன்று எட்டயபுரம் தடபுடலாக தயாரானது. கமுகு, கூந்தல் பனைகள், மலர் சரங்களை சா.கணேசனே பொறுப்பேற்று இரண்டு நாள்களும் அலங்கரித்தார். விழா தொடக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பின், அடிக்கல் நாட்டிய ராஜாஜியே மண்டபத்தைத் திறந்து வைத்தார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை, உணவு அமைச்சர் டி.எஸ்.எஸ்.ராசன், அமைச்சர் டானியல் தாமஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், ம.பொ.சிவஞானம், எல்.கிருஷ்ணசாமி பாரதி, மவுலானா சாகிப் என பல்வேறு கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறையினர் பங்கேற்றனர். சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராசருக்கும், ராஜாஜிக்கும் மிகுந்த பிணக்கு இருந்தவேளையில், காமராசர் மேடையில் பேசிவிட்டு, பார்வையாளர் வரிசைக்குச் சென்று அமர்ந்து விட்டார். அடியேன் காமராஜரை மேடைக்கு அழைத்து வந்து, ராஜாஜியின் பக்கத்தில் அமரச் செய்தபொழுது, திரண்ட கூட்டத்திலிருந்து கரவொலி பலமாகக் கேட்டது. சுமார் 50,000 முதல் ஒரு லட்சம் பேர்கள் வரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக, தினமணியும், ஹிந்துவும் பக்கம்பக்கமாகச் செய்திகள் வெளியிட்டன! கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைத்தார். திறப்பு விழாவுக்கு நீலம் சஞ்சீவரெட்டி வருகை தந்தபொழுது கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டதும், அதுபோலவே கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலத்துக்கு ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் கூட்டு முயற்சியில் சிலை அமைத்து, அவர்கள் நடத்திய விழாவுக்கு தூத்துக்குடி, கோவில்பட்டி மக்கள் திரண்டது எல்லாம் கடந்த கால செய்திகள். இசைக்கு அடித்தளம் அமைத்த நல்லப்ப நாயக்கர் என்ற விளாத்திகுளம் சாமிகள் பற்றி தமிழ்நாடு அறிய வேண்டும். காடல்குடி ஜமீன்தார் பரம்பரையில் வந்தாலும் கூரை வீட்டில் ஒரு துறவிபோல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம், காருகுறிச்சி அருணாசலம் போன்றவர்கள் தங்கள் குருவாக ஏற்று விளாத்திகுளம் சாமிகளை போற்றினர். பெருங்குளத்தில் பிறந்த மாதவய்யா, பெ.நா.அப்புசாமி, விட்டலாபுரத்தில் பிறந்த பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எட்டயபுரத்தில் பிறந்த இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, ஒட்டநத்தத்தை சேர்ந்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், மதுரகவி பாஸ்கரதாஸ், குருமலை சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் அ. சீனிவாச ராகவன், சாத்தான்குளம் ராகவன், உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணம் ஆச்சாரியார் என இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நீண்ட அறிஞர்களை வரிசைப்படுத்தலாம். இடைச்செவல் என்ற ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோர் சாகித்ய அகாடமி விருது பெற்றது முக்கிய செய்தியாகும். திரை உலகில் மறைந்த நடிகர் சந்திரபாபு, திருவைகுண்டத்தில் பிறந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.எஸ்.பாலையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் உள்ளடக்கிய நவத்திருப்பதிகள், கழுகுமலை, கிறித்துவர்கள் வணங்கும் மணப்பாடு, தூத்துக்குடியில் உள்ள மாதா கோவில் என்ற திருத்தலங்களும் உண்டு. இம்மாவட்டத்தில் கிறித்துவ, இந்து, இஸ்லாம் மக்கள் சகோதர பாசத்தோடு பழகுவது ஒரு வாடியாக்கையான நிகழ்வாகும். திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, புன்னைக்காயல் வரை பச்சைப் பசேலென்று வாழை, நெல்வயல்கள் உள்ளன. பெருங்குளத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து சேர்கின்றன. இப்படி பல சிறப்புகள் இந்த மாவட்டத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவில் உள்ள பத்து துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம் உப்பு, மீன்பிடி தொழில் என்ற நிலை மாறி, மின்சாரம் தயாரிக்கும் நகரமாகிவிட்டது. நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்நகரத்துக்கு ஸ்பிக் தொழிற்சாலை, தேங்காய் எண்ணெய், பெயிண்ட் உற்பத்தி ஆலைகள் இருந்தன. ஆனால் இன்று ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலைகள் என பல நிறுவனங்கள் இந்நகரத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்ற கருத்து பலமாக உள்ளது. மராட்டியத்தில் இரத்தினகிரியில் அல்போன்ஸô மாம்பழ உற்பத்தி பாதிக்கப்படும் என்பதற்காக அங்கிருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் குடிபுகுந்தது. இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. இங்குள்ள கடலின் ஆழத்தை பதினாறு அடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. கிழக்குக் கடற்கரை சாலை அமைந்ததால் தூத்துக்குடி எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ளது. காரைக்குடியிலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை ரயில் போக்குவரத்து பரிசீலனையில் உள்ளது. சிப்காட் வளாகம், உணவுப் பூங்கா போன்ற திட்டங்கள் தற்போது வந்துள்ளன. இங்கு இருந்த 20 சதவீத நிலக்கரி இறக்குமதி காரைக்கால் துறைமுகத்துக்கு மாற்றப்பட்டது வருத்தத்தைத் தந்துள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி பகுதியை ஒட்டி 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. சாத்தான்குளம், திருச்செந்தூர் ஒட்டிய பகுதிகளில் பாயும் தாமிரபரணி உபரி நதிகளை இணைத்து தேரிக்காட்டிற்கு வரக்கூடிய நதிநீர் இணைப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு, அத்திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் வடக்கே உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகள் மானாவாரி கரிசல் பூமி இங்கு அடிக்கடி விவசாயம் பொய்த்து வருகிறது. இப்பத்தியாளர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்கின் காரணமாக அச்சன்கோவில் பம்பை இம்மண்ணில் வைப்பாற்றில் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசு, வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை வழங்க மறுக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இம்மண்ணில் விவசாயம் செழித்து வளரும். தூத்துக்குடி நகரம் இந்தியாவுக்கே உப்பிட்டது. ஆனால் இன்று இங்கு குஜராத்திலிருந்து உப்பு வருகிற நிலைமை உள்ளது. பழமையான உப்புத் தொழிலை நம்பி 60,000 பேர் வாழ்கின்றனர். வணிக தொழில் நகரமான கோவில்பட்டியில் நெசவாலைகள், நீண்டகாலமாக இருக்கும் லட்சுமி மில்ஸ், லாயல் மில்ஸ் பல குடும்பங்களுக்கு தீபம் ஏற்றி வந்தது. ஆனால், இன்றைக்கு அந்த ஆலைகளும் சிறப்பாக இயங்கவில்லை. இங்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகளே ஏழைகளுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. இம்மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் கண்டு இருந்தாலும் தமிழகப் பொருளாதார வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் முக்கிய அங்கம் வகிக்கிறது. சேதுக் கால்வாய் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களால் தூத்துக்குடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும். உப்புத் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் மட்டுமல்லாமல் துறைமுக நகரமான தூத்துக்குடி, பாண்டியர் காலத்துச் சரித்திரப் பெருமையை மீண்டும் அடைய வேண்டும். கால்நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாவட்டம் அரை நூற்றாண்டின் சிறந்த பெருமைகளை மீட்டெடுக்கும் என்று வாழ்த்துவோமாக

நன்றி தினமணி

Tuesday, October 19, 2010

காதல்னா என்ன?

காதலர்கள் இல்லாத தேசமே இந்த உலகில் இல்லை.. ஆனால் அவர்களில் எத்தனை பேர் உண்மையாக காதலிக்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் கணவனிடமோ மனைவியுடமோ இருக்கும் குறையை மட்டுமே பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? பிரச்சினைகள் இல்லாத காதலர்களோ, பிரச்சினைகள், சண்டைகள் இல்லாத கணவன் மனைவியோ கிடையாது இல்லையா..

ஆனால் அவர்கள் எல்லாம் பின்வரும் புகைப்படங்களை சற்று பார்த்தால்...அவங்கவங்க காதலர்கள்ட்ட இருக்கற நேர்மறையான விசயம் என்னங்கறதை யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க...

நீங்களே இந்த படங்களை எல்லாம் கொஞ்சம் பாருங்க...எனக்கு சொல்றதுக்கு வார்த்தைகள் குறைவுதான்... ஆனால் இந்தப் புகைப்படங்கள் பேசும் விசயங்கள் நிறைய..!!!!!


Thanks
http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_19.html

Friday, October 15, 2010

இந்தநாளும் இனிய நாளே !

இன்று தலைகுனிந்து படிப்பதெல்லாம்
நாளை தலைநிமிர்ந்து நடப்பட்ப்பதற்கே...
இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே...
இன்று முகம் கவிழ்ந்து போவதெல்லாம்
நாளை முகம் மலர்ந்து வாழ்வதற்கே...
இன்று வலியாய் இருப்பதெல்லாம்
நாளை சிலையாய் மாறுவதற்கே...


நன்றி:எழுதியவருக்கு

இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.

தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.

வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே....

http://bharathbharathi.blogspot.com/2010/09/blog-post_7699.html

வேறு என்ன வேண்டும் ?

(உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை.
நான் பள்ளி மாணவி.
நீங்கள் வாழ்க்கைப் பாடத்தில் மாணவி / மாணவன்.)

பொன் நகையை சுமப்பது அல்ல வாழ்க்கை
புன்னகையை சுமப்பது வாழ்க்கை

கற்பது மட்டுமல்ல வாழ்க்கை
கற்றபடி நடப்பதுதான் வாழ்க்கை

தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வது தான் வாழ்க்கை

சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை

வரலாறு படிப்பதல்ல வாழ்க்கை
வரலாறு படைப்பதுதான் வாழ்க்கை

கோடி நாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை

-- ரோசரி XI-A

http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_7578.htm

Thursday, October 14, 2010

மெய் சிலிர்க்க வைக்கும் சிலி



கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!

இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.

ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.

அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.

இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.

வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.

நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.

என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.

2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.

1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.

இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

(நன்றி தினமணி )

Wednesday, October 13, 2010

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்

1. ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நன்றி -நண்பேண்டா)


2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.


காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?


3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).


4 . பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .


5.நேத்து நைட் ஒரு பெண்ணை ரேப்பிலிருந்து காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)
6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.


7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.


8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?


9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.

10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.

நன்றி
http://adrasaka.blogspot.com/2010/10/18-3654.html

Friday, October 8, 2010

எந்திரன் தெளிவான முழுநிளத்திரைப்படம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9lU17-M0-gzhw3TWzd8tUfcgWT9imMxYStjI_16cCmREtKVyM4OwDl2msLyIrIBEZ4yNoFXX2caqY2uKPsyW_NbvZf3Y4IqK1V4MBEV7weTuK6JesSwP_hZgdMmcrfcfI4POqTeH2mI0V/s1600/enthiran.jpg

படம் பார்க்க இங்கே சொடுக்கவும்

http://v.youku.com/v_show/id_XMjEyMjM1MzM2.html

சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது.

உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.



எங்கு பார்த்தாலும் எந்திரன் கோஷம்! திருட்டு விசிடியா? குண்டர் சட்டம்!!

நீதிதேவன் மயக்கம். அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். அந்த நாடகத்தை அறிஞர் அண்ணா என்ன நினைத்து எழுதினாரோ.. இன்று அது உண்மையாகி விடுமோ என்று அஞ்ச வைக்கிறது. கேடி சகோதரர்கள் என்று அழைக்கப்படும், கலாநிதி மற்றும் தயாநிதி ஆகியோர், கருணாநிதியை விட எப்படி மிகப் பெரிய தீயசக்தி என்று சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தது. அது மீண்டும் மீண்டும் உண்மை ஆகி வருகிறது.Image

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு யுகப்புரட்சி நடந்து விட்டது போல, எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன் என்ற கோஷமும், சன் டிவியை திறந்தால், எந்திரன் திருட்டு விசிடியை ரசிகர்கள் கண்டு பிடித்தனர் என்று செய்தி. இது பத்தாது என்று, மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஸ்ரீதர் வேறு பேட்டி கொடுக்கிறார். எந்திரன் திருட்டு டிவிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று. (ஸ்ரீதர் சார், நீலப்படம் விற்றால் பாயாதா சார் ?) கருணாநிதியோடு, கேடி சகோதரர்கள் பிணக்கில் இருந்த காலத்திலேயே, தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு வேலைகளை கேடி சகோதரர்களால் செய்ய முடிந்தது. கோவையில், பைபர் ஆப்டிக் இழைகளை சன் டிவி நிர்வாகத்தார் அறுத்து எரிந்த போது, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என்று, ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதி அனுப்பிய கடிதம் குப்பையில் போடப்பட்டது. ஆனால், எந்திரன் பட சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று ஒரு காவல் துறை அதிகாரி சன் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த அளவுக்கு, அரசு நிர்வாகத்தை மடக்கிப் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.Image

ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்தது போல, ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்று அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்து விட்டு, நீதித்துறையையும் கபளீகரம் செய்ய கேடி சகோதரர்கள் முதல் முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும், அதற்கு நமது நீதிமான்கள் துணை போயிருக்கிறார்கள் என்பதையும் சவுக்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

நேற்று (செவ்வாய்) இரவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Four Frames என்ற தியேட்டரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 24 நீதியரசர்கள், தங்கள் குடும்பத்தினருடன், எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்திருக்கிறார்கள் என்ற தகவலை சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

நீதிபதிகள் என்றால் அவர்களுக்கு ஆசா பாசம் இருக்கக் கூடாதா, ஏன் அவர்கள் சினிமா பார்க்கக் கூடாதா என்று கேள்வி எழும். நீதிபதிகள் சினிமா பார்க்கலாம். குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், யார் செலவில், யார் அழைப்பில் என்பதுதான் கேள்வி.

சென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் எந்திரன் படம் ஓடுகிறது. தங்களின் Security Officer ம் சொன்னால், டிக்கட் எடுத்து தரமாட்டார்களா ? டிக்கட் எடுத்துப் படம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாமல் நீதிபதிகள் வறுமையில் இருக்கிறார்களா ? அப்படியே வறுமையில் இருந்தாலும், அப்படி என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது?Image

Four Frames என்ற திரையரங்கம், பொது மக்கள் பார்ப்பதற்கானது அல்ல. Preview ஷோ என்றழைக்கப் படும் பிரத்யேக திரையிடலுக்கான தியேட்டர் அது. அந்தத் தியேட்டரில் நீதிபதிகளுக்கான பிரத்யேகத் திரையிடல் இருக்கிறது, நீதிபதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பில், அழைப்பிதழ் வழங்கப் பட்டதாகவும் அதை ஏற்று 24 நீதிபதிகள் குடும்பத்துடன் எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் சார்பாக, நாளை ஏதோ ஒரு வழக்கு வருகிறதா இல்லையா என்பது அடுத்த விஷயம். இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இருக்கும், மங்குணி கண்ணாயிரத்தால் இது வரை கைது செய்யப் படாத துவைக்காத சாக்ஸ் என்று பிரபலமாக அழைக்கப் படும் சக்சேனாதான் சன் பிக்சர்ஸுக்கு தலைமை அதிகாரி என்பது அந்த 24 நீதிமான்களுக்கு தெரியுமா ? அந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, அப்பாவி ஆட்டோ டிரைவர்களைத் தவிர, வேறு யாருமே கைது செய்யப் படவில்லை என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ? Four Frames திரையரங்கில் நீதிமான்களை வரவேற்றவர்களுள் துவைக்காத சாக்ஸும் அடக்கம் என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ?

ஒரு தேடப்படும் குற்றவாளியோடு சேர்ந்து இரவுக் காட்சி பார்க்கும் இந்த 24 நீதிமான்களை என்னவென்று சொல்வது ? நம்மை யாருமே கேள்வி கேட்க முடியாது, நாம் கடவுளுக்கு நிகரானவர்கள், அதனால்தான் நம்மை “மை லார்ட்“ என்று அழைக்கிறார்கள் என்ற அகந்தை தானே காரணம் ?

யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற அகந்தை தானே, பாதிக்கப் படப் போகும் பெற்றோர்களை பற்றி சற்றும் நினைக்காமல், மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக தீர்ப்பளிக்க தைரியம் அளித்தது ?

Imageஆனால், இதையெல்லாம் சரிக்கட்ட Judicial Standards and Accountability Bill 2010 என்ற புதிய சட்டம் வர இருக்கிறது. இதன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும், இதன் வரம்பில் வருவார்கள். ரொம்பவும் கடுமையான சட்டம் போல இது தோன்றாவிட்டாலும், எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று பரவாயில்லை அல்லவா ? முதலில் இந்தச் சட்டம் வரட்டும். அதன் பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து, செம்மையாக்குவோம்.

எந்திரன் படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

அடுத்த எந்திரன் செய்தி. டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், தினமணி நாளிதழும், எந்திரன் என்ற திரைப்படம் எப்படி ஏகபோக முதலாளித்துவத்தை வளர்க்கிறது, சிறிய படங்கள் எப்படி இதனால் நாசமாக்கப் படுகின்றன என்று வெளியிட்ட இரண்டு செய்திகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று இன்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த இரண்டு நாளிதழ்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.

முதலமைச்சருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு விட்டு, குடும்பத்தினர் சகிதமாக எந்திரன் படம் பார்த்துவிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சன் பிக்சர்ஸ் இப்படி படம் எடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது என்னையே நான் பாராட்டிக் கொள்வது போலாகும் என்று கூறும், ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் இருக்கும் போது, கேடி சகோதரர்களுக்கு திமிருக்கு என்ன குறைச்சல் ?

இப்போது சவுக்கு மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரட்டும். கேடி சகோதரர்களுக்கு மானமே இல்லை. இல்லாத மானத்தை எப்படி நஷ்டப் படுத்த முடியும் என்று பதில் வழக்கு சவுக்கு தொடுக்கும். கேடி சகோதரர்களின் வரலாறு, கலாநிதிக்கும் காவேரி கலாநிதிக்கும் திருமணம் ஆன சூழல், கலாநிதியின் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சந்தியில் கொண்டு வந்து சவுக்கு நிறுத்தும்.

கேடி சகோதரர்களே….. உங்கள் பருப்பு பகவான் சிங்கிடம் வேகலாம். ஆனால், சவுக்கிடம், எந்த குக்கரில் வேகவைத்தாலும் வேகாது.

சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது. உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.

நன்றி : சவுக்கு.நெட்,
http://suthumaathukal.blogspot.com/2010/10/blog-post_558.html

Thursday, September 30, 2010

சிந்தனைக்கு விருந்து!

Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"

Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"

Einstein said..
"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.

Abraham Lincoln said..
"If friendship is your weakest point then you are the strongest person in the
world."

Shakespeare said..
"Laughing Faces Do Not Mean That There Is Absence Of Sorrow!
But It Means That They Have The Ability To Deal With It"

Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
But By The Silence Of My Friends".

Shakespeare said..
"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"

Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"

William Arthur said..
"Opportunities Are Like Sunrises, If You Wait Too Long You Can Miss Them"

Hitler said..
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"

Shiv Khera..
"If We Are Not Part Of The Solutions, We Are The Big Problems"
"Winners Never Do The Different Things, They Do The Things Differently".

John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"

நன்றி :http://classroom2007.blogspot.com/2010/09/blog-post_30.html

Wednesday, September 29, 2010

விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்

சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம்.

இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot
செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 MB ).உங்கள் Hard drive வில் ( 600 – 640 MB ) அளவுமட்டுமே இடத்தை எடுத்துக்கொள்ளுமாம்.

கணினி உபயோகிப் பவர்களில் அனைவரும் விரும்புவது தங்கள் OS வேகமாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் BlixOS சின் வேலை செய்யும் வேகம் பிரமிக்கதக்கது. 1 GB அளவிற்கான கோப்புகளை ஒரு drive வில் இருந்து மற்றொரு drive விக்கு மாற்ற 40 வினாடிகள் மட்டும் எடுத்துகொள்ளுமாம்.

பலர் இன்னும் குறைந்த செயல்பாடுடைய pentium 4 ப்ரோசெச்செர் வகை கணினியை உபயோகித்து வருகிறார்கள். இதில் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 Operating System தை இயக்குவது கடினம். ஆனால் BlixOS நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத செயல்பாட்டை காட்டுமாம்.BlixOs மூன்று வெவ்வேறு வடிவில் உருவாக்க பட்டு உள்ளது. BlixOS Home ,BlixOS Professional மற்றும் BlixOS ultimate ஆகும். இதில் BlixOS Home ஒரு operating environment, இது OS இல்லை.

ஒரு பொருளை உருவாக்கினால் போதுமா அந்த பொருளை
சரியான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.
அந்த வகையில் சுயெஸ் தன் நண்பனுடன் இணைந்து தங்களுடைய
Blix Corporation நிறுவனத்தை உருவாக்கினார். வரும் செப்டம்பர் 30
அதிகாரப்பூர்வமாக BlixOS Professional Beta வை வெளியிட உள்ளனர்.

நன்றி :http://kokarakko.wordpress.com

Monday, September 27, 2010

உங்களுக்கு எதற்கு மூலையும்? இதயமும்?

உங்களுக்கு எதற்கு மூலையும்? இதயமும்?
அயோத்தியில் ஒரு கோயில் கட்டிவிடுவதால் ராம ராஜ்ஜியம் வந்து விடும் என்று நம்புவதற்கு எதற்கு மூலை? ஒரு மனிதன் போட்டுயிருக்கும் சட்டை காவியா? பச்சையா அல்லது வெள்ளையா என்று மட்டும் பார்பவர்களுக்கும்
தனக்கும், தன் மதத்திற்கு எதிரான அந்த நிற சட்டையை அணிந்ததற்காகவே அவனை கொலை செய்ய துணிபவர்களுக்கு எதற்கு இதயம்?


வரலாறு முழுக்க மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நடத்தபட்ட போர்களும் இழந்த பல கோடி உயிர்களும் போதாதா? இன்னும் அடங்கவில்லையா அந்த வெறி... மனித தவறுக்கு கடவுளை காரணம் ஆக்காதே என்று சொன்னால், பதில் சொல்லுங்கள், பம்பாய் கலவரங்களில் இஸ்லாமியர்களை தேடி தேடி கொன்று குவித்தார்களே இந்து வெறியர்கள், அப்போது ஏன் ராமன் வேடிக்கை பார்த்து கொண்டுயிருந்தான்?, அல்லா இஸ்லாமியிர்களை ஏன் காபாற்றவில்லை? அல்லது அப்படி தன் சக மனிதனை கொடுரமாய் கொலை செய்ய தூண்டிய அந்த எண்ணத்தை படைத்தவர் யார்? ராமனா?, நீங்கள் சொல்லலாம் அந்த எண்ணம் சுயநலம் கருதி இன்னோரு மனிதன் விதைத்தது என்று அப்போது அவனுக்குள் அதை விதைத்தது? இப்படியே போனால் அந்த முதல் விதை யார் உருவாக்கியது? சாத்தான் என்றால்? சாத்தானை படைத்தது யார்? பதில் சொல்லுங்கள்....

எல்லாம் வல்ல கடவுள் ஏன் நன்மையை மட்டுமே படைத்திருக்கலாமே தீமையையும் ஏன் படைத்தார்?

சரி! நாம் எல்லோரும் இந்துகள், "ஹரிஜன்" என்றால் கடவுளின் குழந்தை என்று சொல்லிவிட்டு அவர்களை கருவரைக்குள் அனுமதிக்காது தடுப்பது எது? சாதி திமிரா? ஆதிக்க மனோபவமா? பக்தியா?
இன்னும் கொடுமை 500 ரூபாயை விட்டு எறிந்தால் அதை பொருக்கி கொண்டு கடவுள் சிலையை கட்டிபிடிக்க அனுமதிக்கும் உங்கள் கோயிலின் நிலை தான்...

இதையும் மிஞ்சும் வகையில் கருவரையில் சாந்திமுகூர்த்தமே நடத்திவிட்ட பிறகும் எப்படி வாய் கூசாமல் சொல்லுகிறீர்கள், அங்கு கடவுள் இருக்கிறார்; அது புனிதம்; அங்கு பூநூல் போட்டால் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று.

ஏற்கனவே இருக்கின்ற கோயில்களே இந்த இழிநிலை என்றான போது, எதற்கு இன்னோர் கோயில் அதுவும் அயோத்தியில் என்ன சாதிக்கபோகிறீர்கள் அதை கட்டிவிட்டு, அதை கட்டி முடித்தவுடன் இந்தியாவின் வருமை ஒழிந்துவிடுமா? சமதர்மம் பிறந்துவிடுமா? இல்லை மனிதர்கள் தான் சுயநலம் விட்டுவிடுவார்களா? எதுவும் நடக்கபோவதில்லை அப்புறம் எதற்கு இந்த ஆர்பாட்டம்? இது புதிதாய் கெட்டப்படும் தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் பொருந்தும் தானே?

உங்கள் மூலை கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள் எவ்வளவு முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் உங்கள் மீது திணிக்கபட்டுயிருக்கிறது என்று புரியும், கொஞ்சம் உங்கள் இதயத்தோடு பேசி பாருங்கள் அது சொல்லும், ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு அரை மணி நேரம் அந்த வயது முதிர்ந்த குழந்தைகளோடு பேசிவிட்டு வரும் நிம்மதி ஒரு நாள் முழுக்க கோவிலிலோ, தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ இருந்தாலும் கூடக் கிடைக்காது என்று.

நம் முன்னே அன்பும், அரவணைப்பும் வேண்டி ஆயிரமாயிரம் முதியவர்கள் இருக்கிறார்கள்,

நல் கல்வி அறிவு வேண்டி பல லட்ச குழந்தைகள் இருக்கிறார்கள்,

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனது தவிர ஒன்றுமே கிடைக்காத கோடான கோடி உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் விடியல் வேண்டி...

சிந்தித்து பாருங்கள் நண்பர்களே! நாம் கட்டவேண்டியது புதிய கோயில்களையா? சிந்திக்க கற்று தரும் பள்ளிகளையா?

ஒன்று கடவுளை மறந்துவிட்டு, மானுடத்திற்காக போராடுங்கள் அல்லது மூடநம்பிக்கைகளும், போலி சம்பிராதயங்களும்,மத சாயங்களும்
நீக்கி அன்பின் ஊடாகவும் அறிவியல் ஊடாகவும் கடவுளை தேடுங்கள்....

அதை விடுத்து மூடநம்பிக்கைகளில் மூழ்கி உங்களையும் கடவுளையும் சிறுமை படுத்தாதீர்கள்.

இல்லை இல்லை நான் சிந்திக்க மாட்டேன் என் தாத்தா இப்படி தான் இருந்தார், என் அப்பாவும் இப்படி தான் இருந்தார் அதனால் நானும் இப்படி தான் இருப்பேன் என்றால் ஒப்புக்கொள்ளுங்கள் உங்களுக்கு மூலையும் இதயமும் தேவையில்லை என்று!!!

நன்றி :http://adangatamizhan.blogspot.com/2010/09/blog-post_27.html

ஹிட்லரின் கொடூரக்கொலைகள்



சர்வாதிகாரம் என்பதற்கு பொருள் அடால்ஃப் ஹிட்லர் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஹிட்லர் லட்சக்கணக்கான கொலைகளில் சில..

முதல் உலகப்போரில் 40000 குழந்தைகள் கொல்லப்பட்டன. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இது பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது.
சிறைகளில் சித்திரவதைக்கூடம் இருக்கும், சிறையே சித்ரவதைக்கூடமாக இருந்தது ஜெர்மனியில், ஹிட்லரின் ஆட்சி காலத்தில்.1933 ஜெர்மனியில் ரெய்க் ஸ்டாக் சிறை தீக்கிரையான போது அரசியல் மற்றும் ராணுவ எதிரிகளை அடைப்பதற்காக உருவாகப்பட்டது நாஜி சிறைச்சாலைகள். யூதர்களை தேடிப்பிடித்து கைது செய்து நிர்வாணமாக சிறைக்கு அனுப்புவார்கள்,

சிறைக்கு வரும் போது இறந்து விட்டால் அவன் அதிஷ்டசாலி. அல்லாமல் சிறைக்கு வந்தால் காற்று புகாத அளவுக்கு மூடப்பட்ட அறையில் ஆட்டு மந்தை மாதிரி மனிதைகளை அடைத்து விஷ வாயுவை செலுத்தி மூச்சுத்திணறி ஒவ்வொருவராக செத்துமடிவதை பார்த்து மகிழ்வார்கள். துப்பாக்கியை பரிசோதிக்க யூதர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டார்கள், மருத்துவ பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்தார்கள், தோலைஉரித்தும், வெந்நீரில் மிதக்கவிட்டும் மகிழ்ந்தார்கள்.

1942 - ம் வருடம் ஆஸ்விச் சேம்பர் என்ற புதிய சிறையை கட்டினார் ஹிட்லர். அந்த சிறையில் 15 நாட்களுக்கு ஒரு ரொட்டித்துண்டு மட்டுமே கொடுப்பார்கள், அதை சாப்பிட்டு சாகாமல் இருந்தால் அவன் பரிட்சையில் பாஸ், இந்த செய்தி தெரிந்து அப்பாவி யூதர்கள் காவலர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்விச் சேம்பருக்கு வரதொடங்கினார்கள், ( உடனே வரும் சாவை கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்று ) கைதிகள் எண்ணிக்கை அதிகமானதை பார்த்த காவலர்கள் ரொட்டித்துண்டு கொடுப்பதை நிறுத்தி விட்டு விஷ வாயுவை செலுத்தி கொல்ல ஆரம்பித்தார்கள்.

இரண்டு ஆண்டுகளில் ஆஸ்விச் சேம்பரில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சம்

ஹிட்லரின் கொமைகளில் சில
































Source:http://verumpaye.blogspot.com/2010/04/blog-post_12.html

Saturday, September 25, 2010

பெட்ரோல் விலை எப்போ குறையும் ?


பெட்ரோல் விலை குறித்து நாளொரு செய்தி நம்மை வந்தடைகிறது .உண்மையில் பெட்ரோல் விலைதான் என்ன ?

நாம் போன்ற வளரும் நாடுகளின் முக்கிய வருமானமாக அரசு கச்சா எண்ணெய் விற்பனையில் இருந்து வரும் வரி தொகையை எடுத்துகொள்கிறது

மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாயாக இந்த வரிப் பணம் ,பட்ஜெட்டில் பங்கு கொள்கிறது .

கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி ,மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம் ,துறைமுக கட்டணம் ,
மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி ,கல்வி வரி ,மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகள் பெட்ரோல் விற்பனை விலையை நிர்ணயிக்கின்றன .

2009-10 ஆண்டில் மத்திய மற்றும் மாநில
அரசுகளுக்கு பெட்ரோல் முலம் வந்த வருமானம் 1,83,861 கோடி

ONGC,IOC,HP,BPC இவை யாவும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் நிறுவனங்கள் .

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 15 வருடம் அனுபவம் பெற்ற சாதரணமாக தொழிலாளியின் வருட சம்பளம் எட்டு லட்சம் ,டிகிரி முடித்த டிரைவர் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம்,5 வது படித்த ஒரு பராமரிப்பாளர் சம்பளம் 7 லட்சம் .


அது போக மாதத்தில் தொடர்ச்சியாக 15 நாட்கள் மட்டுமே வேலை .

தற்போது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யபடுகிறது .

இனி வரும் காலங்களில் பெட்ரோல் விலை குறைவு என்பது கனவில் மட்டுமே சாத்தியம் .

எஸ் .எம் .எஸ் .ஜோக்ஸ் 1

தண்ணி அடிச்சா மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

* மாப்ள.. நீ ஒண்ணியும் கவலைப்படாத.. நான் ஸ்டேடியாத்தான் இருக்கேன்..

* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

* இன்னொரு கல்ப் அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

கடைசியா.. இதுதான் பட்டாசு...

* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது

@@@@@

உலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் எது தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,

உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்

மிக்க நன்றி.

@@@@@
உலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம். ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா?

* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி (மொத்த டிக்கட் ஏழு)

* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு (இது காதலா கள்ளக்காதலா?)

* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல (அவ்வ்வ்வவ்வ்வ்)

* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)

தாஜ்மகாலைப் பத்தி இப்போ சொல்லுங்க சாமிகளா..

@@@@@

உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..

"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்குட்டு உருப்புடப் போகுது?"

@@@@@

பத்து வருஷத்துக்கு முன்னாடி..

ஒரு பணியாரம் பத்து பைசா, ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா

இன்னைக்கு..

ஒரு போன்காலுக்கு பத்து பைசா, ஒரு பணியாரம் ஒத்த ரூவா

அதனாலத்தான் சொல்றேன்..

வாழ்க்கை ஒரு வட்டம்டா

@@@@@

Thursday, September 23, 2010

இதயம் கனத்த மென்பொறியாளன்!!!

சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!!
இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!!

அரை அடி இடைவெளியில்
ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
அந்நியப்பட்டவர்கள் போல்
திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!

விருப்பங்களுக்கேற்ற நீராகாரம்
விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்!
விடிய விடிய வேலை
விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்!

அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்!
இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்!

இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்!

உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை!

மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்!

முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.

விடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்
ஈடுகட்டும் வாடகை தாய்!!!

பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
கதகதகப்பில் உறங்கும்

எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

கை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது!

நெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது
மடிந்துதான் போகின்றன!!

கண்களில் தோன்றிய கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன!

நித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன!


அன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்!

இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
தொலைத்து விட்டேன்!!!

நன்றி http://ananyasrinivasan.spaces.live.com/blog/cns!1A5F7FB277BF9159!139.entry

Sunday, September 19, 2010

ஆட்டம் அடங்கபோகுது

செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதி நம் இந்தியாவில் வரப்போகிறது. ஆம் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை நமது TRAI அளித்துள்ளது . இப்பொழுது நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி என்ற வசதியை நாட்டில் அறிமுகப்படுத்த நமது அரசும் ஏற்கெனவே கொள்கை ரீதியில் முடிவெடுத்துவிட்டது. இந்த வசதி மூலம் ஒரு வாடிக்கையாளர் தனது செல்போன் எண்ணை மாற்றாமலேயே ஒரு தொலைத் தொடர்பு நிறுவன இணைப்பில் இருந்து மற்றொரு நிறுவன இணைப்பைப் பெற முடியும். MNP என்ற இந்த புது வசதி வரும் அக்டோபர் 31 முதல் நாடு முழுவதும் அமலாகிறது .

மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி வருகின்றன.

இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும். 3G வசதிகள் வரபோகும் இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.

Source
http://kvpraj.blogspot.com/2010/09/blog-post_19.html

Saturday, September 18, 2010

இவருக்கு ரிஸ்க் எடுக்குறது ,ரஸ்க் சாப்பிடுற மாதிரி !

கண்ணதாசன்-25

காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...
காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...

` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.


கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!


`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...


`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!


` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.


கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!


`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...


`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!

நன்றி:விகடன்






Friday, September 17, 2010

இலவசம் என்றால் இதுவா ?

இலவசத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தபின்னர், அதன் பலனை தொடர்புடையோர் அனுபவிக்க முடியாததுடன், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பு அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், அத்தகைய திட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும்? அப்படியொரு திட்டமாக மாறி வருகிறது மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்.

பள்ளிக் குழந்தைகள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தாலும், பேருந்துகள் நிற்காமல் அவர்களைக் கடந்து ஓடுவதும், மாணவர்கள் அப்பேருந்தை விரட்டிச் செல்வதும், பாதிப் பேர் ஏறியும், மீதிப் பேர் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழக நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.

அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு மாணவர், நிற்காது சென்ற பேருந்தை விரட்டிச் சென்று ஏற முயன்றபோது கீழே விழுந்து இறந்தார். ராமநாதபுரத்தில் ஒரு மாணவி, இலவசப் பயண அட்டை இல்லாத காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதனால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த இரு சம்பவங்களையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. நீதிபதிகள் டி. முருகேசன், எஸ். நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாணவர்களுக்குப் பிரச்னை இல்லாதபடி அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதுடன், ஓட்டுநர், நடத்துநர்களை எச்சரித்துள்ளனர். இத்தகைய சம்பவம் மீண்டும் தங்கள் கவனத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வசூல் "பேட்டா' குறைகிறது என்பதற்காக மாணவர்களை நடத்துநர்களும், ஓட்டுநர்களும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அடிப்படையான காரணத்தை இந்த வழக்கில் நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆம். இதுதான் கசப்பான உண்மை.

1990-ல் திமுக அரசு கொண்டு வந்த திட்டம்தான் பேருந்துகளில் மாணவர் இலவசப் பயணத் திட்டம். முதலில் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் இதை பிளஸ் 2 மாணவர்கள் வரை நீட்டித்தார்கள். அதன் பிறகு அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இப்போது தொழிற்பயிற்சிக் கல்லூரி (ஐடிஐ) மாணவர்களுக்கும் கடந்த மே மாதம் இச்சலுகை நீட்டிக்கப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தால் பள்ளி மாணவர்கள் 2.81 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேரும் பயனடைகின்றனர்.

இத்திட்டம் இலவசப் பயணம் என்ற பெயரில் இருந்தாலும் இது இலவசமே அல்ல. இந்த சேவைக்காக மக்கள் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ 300 கோடியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு அளிக்கிறது. அதாவது, மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ 10,000 மக்கள் வரிப்பணம் இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிறகு ஏன் இந்த அவமானம்? பிறகு ஏன் மாணவர்களைக் கண்டால் பேருந்தை நிறுத்தாமல் வேகமாகப் பறக்கிறார்கள்? இதற்குக் காரணம் நீதிமன்றம் குறிப்பிட்டதைப்போல, வசூல் "பேட்டா'தான்!

ஒவ்வொரு நாளும் ஒரு பேருந்தில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலாகும் பணத்தில், 2 விழுக்காடு தொகை "கலெக்ஷன்

பேட்டா' என அளிக்கப்படுகிறது. இதனை ஓட்டுநரும் நடத்துநரும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ 10,000 வசூல் என்றால், ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் தலா ரூ 100 கிடைக்கும். இத்தகைய இலவச பயண அட்டைகள் இவர்களது வசூல் கணக்கில் ஏறாது. இவர்களை ஏற்றினால் பேருந்து நிரம்பிவிடும். இந்த மாணவர்களால் வசூல் "பேட்டா' கிடைக்காது என்பதுடன், மற்ற பயணிகளை ஏற்ற முடியாதபடி மாணவர்களே பேருந்தில் நிரம்பி வழிவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியாததன் விளைவுதான் இலவச பயண அட்டை மாணவர்களை இவ்வாறாகப் புறக்கணிக்கிறார்கள் என்கிற நீதிமன்றத்தின் கணிப்பு சரியானதுதான்.

எத்தனையோ செய்திகள், படங்கள், புகார்கள் என்றாலும் அரசுப் போக்குவரத்துக் கழகமோ, அத்துறை அமைச்சரோ இதைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏளனப் புன்னகையுடன் புறந்தள்ளி விடுகிறார்கள். அவமானப்படுவதும் அவதிப்படுவதும் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அல்லவே!

மாணவர்கள் அவமதிக்கப்படுவதை உண்மையிலேயே தமிழக அரசு விரும்பவில்லை என்றால், தற்போதைய நடைமுறையை மாற்றியாக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு 180 வேலை நாள்களுக்காக 360 "டோக்கன்'களை அளித்து, அந்த "டோக்கன்'களை நடத்துநர் தனது வசூல் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் புதிய நடைமுறையை உருவாக்கினால் மட்டுமே, நடத்துநர்களும் ஓட்டுநர்களும் இந்த மாணவர்களை மனித உயிர்களாக, பயணிகளாக மதிப்பார்கள். இல்லாவிட்டால், மாணவர்கள் ஆண்டுதோறும் ஆங்காங்கே இறப்பது நடக்கவே செய்யும்.

ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் நீதிமன்றம் தந்துள்ள இந்த நம்பிக்கையான தீர்ப்பைப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை ஏற்றிக்கொள்ள மறுத்து விலகி ஓடும் பேருந்துகள் பற்றிய தகவல்களுடன் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக வழக்குத் தொடுக்கலாம். நீதிமன்றத்தின் படியேறுவோர் எண்ணிக்கை அதிகமாகும்போதாகிலும், இவர்கள் கீழ்ப்படிவார்களா என்பதைப் பார்க்கலாம்.

தினமணி