செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதியை நமது TRAI அடுத்த மாதம் துவங்கபோவதாக அறிவித்துள்ளது. பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த MNP ( மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ) முறை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது . இந்த வசதியின் மூலம் நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.
மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .
மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .
செல்போன் கம்பனிகள் அறிவித்துள்ள தேதி விபரங்கள்
Nov 8th -: Bharti Airtel, Videocon, Loop Mobile
Nov 11th –: Aircel, Uninor, Reliance GSM ( Rcom) and Tata Docomo
Nov 14th-: BSNL ,MTS, Idea Cellular and BSNL CDMA
Nov 17th-: Vodafone Essar, Reliance Mobile (CDMA) and Tata indicom.
இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும்.
3G வசதியை வரும் தீபாவளிக்கு தரப்போவதாக டாட்டா -டோகோமோவும் ,டிசம்பரில் தரப்போவதாக ஏர்டேல்லும் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.
Thanks
http://erodethangadurai.blogspot.com/2010/10/blog-post_25.html
நான் ரொம்ப பிஸினு சொல்றவங்க இந்த பக்கம் வர வேணாம்....நீங்க நம்மாளு இல்ல..உங்க ரேஞ்சே வேற... $$ இங்க எல்லாமே சுட்ட பழம் தான் $$
Thursday, October 28, 2010
Thursday, October 21, 2010
கட்டுக்குள் அடக்காதே !!!
காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.
"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால் காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.
காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம் இல்லாமல் இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார். அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில் உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம் ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...
இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல் சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...
நன்றி குரு
http://rkguru.blogspot.com/2010/10/blog-post.html
Labels:
தனி மனிதன்
வெள்ளிவிழா வாழ்த்துகள்!(தூத்துக்குடி)
ஓன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிந்து தூத்துக்குடி தனி மாவட்டமாகி, 20.10.2010 அன்று வெள்ளி விழா கொண்டாடுகிறது. இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இருந்து, ஆறு ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, பன்னிரெண்டு ஒன்றியங்கள் உள்ள இந்த மாவட்டம் இடைக்காலத்தில் சிதம்பரனார் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. வீரம் செறிந்த இந்த மாவட்டம் மானாவாரி கரிசல் மண், தாமிரபரணி பாயும் தீரவாசம், தேரிக்காடுகள், கடற்கரைப் பகுதி என பல புவியியல் அமைப்புகளைக் கொண்டது. பொதிகை, தாமிரபரணியின் நதி மூலம் ஆகி, இம்மாவட்டத்தின் உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. இங்கு கட்டபொம்மன், தீரன் சுந்தரலிங்கம், ஊமைத்துரை, வெள்ளையத் தேவன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சி., உமறுப்புலவர் போன்ற ஆளுமைகள் உலவினர். காட்டிக் கொடுத்தவர் என்ற ஏளனப் பேச்சுக்கு ஆளாகிவிட்டவர் என்றாலும், எட்டயபுரம் ராஜா குடும்பத்தினர் தமிழுக்கும், தமிழிசைக்கும் தொண்டாற்றியதை மறக்க முடியாது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியத் தாக்கத்தால் ஆங்கிலேய அரசை எதிர்த்து உப்பளத் தொழிலாளர்கள் குலசேகரப் பட்டினத்திலிருந்து உடன்குடி வரை உள்ள தந்திக் கம்பங்களை வெட்டி அழித்து, ஆங்கில உப்பள கண்காணிப்பாளர் லோனை வெட்டிச் சாகடித்தனர். லோன் கொலை வழக்கு எனப்பட்ட அவ்வழக்கில் பல தியாகிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பூச்சிக்காடு கள்ளுக்கடை, மாவடி பண்ணை வழக்குகளிலும் ஆங்கிலேயர்களால் பலர் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். இம்மாவட்டம் விடுதலை வேள்வியில் ஆர்த்து எழுந்தது. புனித சவேரியர், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் இம்மண்ணில் அருந்தொண்டுகள் செய்தனர். உமறுப் புலவர், சீதக்காதி, சதக்கதுல்லா அப்பா, காசிம் புலவர் போன்றோர் இஸ்லாமிய மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர், ஆழ்வார் திருநகரில் வாழ்ந்த நம்மாழ்வார் போன்றோர்களுடைய தமிழ்ப்பணி மறக்க முடியாது. குமரகுருபரர் காசிக்குச் சென்றபொழுது ஒளரங்கசீப் இவரைப் பாராட்டி தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது, குமரகுருபரர் காசியில் இந்துக்களுக்கு மடம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஒளரங்கசீப் அதனை ஏற்று மடம் அமைத்துக் கொடுத்தார். அம்மடத்துக்கு இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் வரவேண்டும் என குமரகுருபரர் சொல்லியது வரலாற்றுச் செய்தியாகும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த கொற்கை துறைமுகம், சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களின் ஆட்சிகளில் பல்வேறு காலகட்டங்களில் இருந்துள்ளது. கொற்கை முத்தை உலக அழகி கிளியோபாட்ரா அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் கொற்கைத் முத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கொற்கையிலிருந்து மிளகு, ஏலம், கிராம்பு போன்ற பல பொருள்களை யவனர்கள் கொண்டு சென்றனர். இங்கு அராபிய, சீன, ரோம நாட்டு காசுகளும், கோப்பைகள், பீங்கான்கள், மதுபாட்டில்கள் போன்றவை கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சி அறிஞர் சாத்தான்குளம் அ.ராகவன் கூறுகிறார். கொற்கையை ஆரவாரமிக்கது என்று அகநானூறு குறிப்பிடுகிறது. இக்கடற்கரையின் அழகை ஐங்குறுநூறு பாடுகிறது. சிலம்பில் சொல்லப்பட்ட கொற்கைப் பரல்கள் ஆங்கிலத்தில் பியர்ல்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் இந்த முத்துக்கள் ரஷ்ய காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளன. பிளினி இங்கு நடைபெறும் வியாபாரத்தைப் பற்றி விரிவாகச் சொல்கிறார். பழைய காயலும் கொற்கைக்குப் பின் பிரசித்தி பெற்றது. பின்னர் தூத்துக்குடி துறைமுக நகரமாக மாறியது. 16-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களுக்கும், போர்த்துகீசியர்களுக்கும் வியாபாரப் போட்டி நடந்தது. டச்சுக்காரர்களின் கண்களில் தூத்துக்குடி பட்டதும் அதைக் கைப்பற்றினர். பிற்காலத்தில் வணிக கேந்திரமாகப் பல்வேறு மேலை நாட்டினருக்கு விளங்கியது. தூத்துக்குடி என்றால், மணல் தூற்றி நிரவப்பட்டது என்பது பொருள். பருத்தி மார்க்கெட் தூத்துக்குடியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததால் கோரல் மில் போன்ற நெசவாலைகளும் இங்கு அமைந்தன. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரத்திலிருந்து மாட்டு வண்டிகளில் பருத்திகள் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதற்காக இன்றைக்கும் இருக்கிற கிரேட் காட்டன் ரோடு 1940-ல் அமைக்கப்பட்டதாக எச்.ஆர். பேட் ஐ.சி.எஸ். குறிப்பிடுகிறார். வ.உ.சிதம்பரனாரின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, தூத்துக்குடி பீச் ரோடு 4-ம் எண் கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது. வெள்ளையரை எதிர்த்து விடுதலை உணர்வை வளர்ப்பதற்கு, வ.உ.சி., கிழக்கு அலை கடலின் நடுவில் கப்பலைச் செலுத்தினார். அச்சமயம் ஆங்கிலேயர் தூங்குவதற்கு அஞ்சி, நடுக்கடலில் படகில் தூங்கினர். 1908 மார்ச் 13-ம் நாள் தூத்துக்குடியில் கிளர்ந்தெழுந்த போராட்டம் ஆங்கிலேயர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனால் தேவையற்ற வகையில் ஆங்கிலேயர்கள் விடுதலை வீரர்களைக் கைது செய்து பல கலகங்கள் உருவாகின. அதில் திருநெல்வேலி கலகம் குறிப்பிடத்தக்கது. விபின் சந்திர பாலரின் கைதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த இந்த நெல்லை கலவரத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்த சரித்திரம் தமிழகத்தின் நினைவுகளிலிருந்து அழிக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள். அண்ணல் காந்தி தூத்துக்குடிக்கு இருமுறை வந்தார். ஒருமுறை சிதம்பரனார் சிறையிலிருந்தபொழுது அவரைப் பற்றி கூட்டத்தில் காந்தி பேசினார். 1927-ல் இரண்டாம் முறையாக தூத்துக்குடிக்கு வந்த காந்தி, தியாகி விஸ்வநாததாஸின் தேசியப் பாடலைக் கேட்டு கைதட்டி ரசித்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தமிழ் கற்க பலமுறை முயற்சி செய்ததாகவும், தமிழினுடைய தொன்மையும், சிறப்பையும் அறிந்து பிரமித்துள்ளதாகவும், திருக்குறளில் சொல்லப்பட்ட அபூர்வ கருத்துகள் தன் கவனத்தை ஈர்த்தது என்றும் கூறினார். தமிழையும், திருக்குறள் மூலத்தையும் படிக்க வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் உள்ளது. இதனைக் கற்க ஆண்டவன் வாய்ப்பு அளிக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது என்று தூத்துக்குடியில் பேசினார். கல்கி அமைத்த எட்டயபுரம் பாரதி மண்டபம், வெள்ளை மாளிகை போன்று இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட நன்கொடையிலிருந்து, தன்னுடைய தலையாய பணியாக பாரதி மண்டபத்தை அமைத்தார் கல்கி. அந்நிகழ்ச்சியைப் பற்றி கல்கி குறிப்பிடும்பொழுது- ""எட்டயபுரம் கரிசல் மண். மழை பெய்தால் சேறாகி விடும். அன்றைய மராமத்து அமைச்சர் பக்தவத்சலம் உதவியால் சாலைகள் சீரமமைக்கப்பட்டன. திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ஏ.பி.சி.வீரபாகு, வீரத்தியாகி ஸ்ரீ சோமயாஜுலு, காரைக்குடி கம்பன் கழகத் தலைவர் சா.கணேசன் ஆகியோர் பாரதி மண்டப திறப்பு விழாவுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்தனர். மேற்கு வங்க கவர்னர் ராஜாஜி, சென்னை மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் பாரதி ஸ்பெஷல் ரயில் மூலம் சென்னையிலிருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்தனர். திறப்பு விழாவன்று எட்டயபுரம் தடபுடலாக தயாரானது. கமுகு, கூந்தல் பனைகள், மலர் சரங்களை சா.கணேசனே பொறுப்பேற்று இரண்டு நாள்களும் அலங்கரித்தார். விழா தொடக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பின், அடிக்கல் நாட்டிய ராஜாஜியே மண்டபத்தைத் திறந்து வைத்தார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை, உணவு அமைச்சர் டி.எஸ்.எஸ்.ராசன், அமைச்சர் டானியல் தாமஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், ம.பொ.சிவஞானம், எல்.கிருஷ்ணசாமி பாரதி, மவுலானா சாகிப் என பல்வேறு கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறையினர் பங்கேற்றனர். சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராசருக்கும், ராஜாஜிக்கும் மிகுந்த பிணக்கு இருந்தவேளையில், காமராசர் மேடையில் பேசிவிட்டு, பார்வையாளர் வரிசைக்குச் சென்று அமர்ந்து விட்டார். அடியேன் காமராஜரை மேடைக்கு அழைத்து வந்து, ராஜாஜியின் பக்கத்தில் அமரச் செய்தபொழுது, திரண்ட கூட்டத்திலிருந்து கரவொலி பலமாகக் கேட்டது. சுமார் 50,000 முதல் ஒரு லட்சம் பேர்கள் வரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக, தினமணியும், ஹிந்துவும் பக்கம்பக்கமாகச் செய்திகள் வெளியிட்டன! கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைத்தார். திறப்பு விழாவுக்கு நீலம் சஞ்சீவரெட்டி வருகை தந்தபொழுது கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டதும், அதுபோலவே கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலத்துக்கு ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் கூட்டு முயற்சியில் சிலை அமைத்து, அவர்கள் நடத்திய விழாவுக்கு தூத்துக்குடி, கோவில்பட்டி மக்கள் திரண்டது எல்லாம் கடந்த கால செய்திகள். இசைக்கு அடித்தளம் அமைத்த நல்லப்ப நாயக்கர் என்ற விளாத்திகுளம் சாமிகள் பற்றி தமிழ்நாடு அறிய வேண்டும். காடல்குடி ஜமீன்தார் பரம்பரையில் வந்தாலும் கூரை வீட்டில் ஒரு துறவிபோல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம், காருகுறிச்சி அருணாசலம் போன்றவர்கள் தங்கள் குருவாக ஏற்று விளாத்திகுளம் சாமிகளை போற்றினர். பெருங்குளத்தில் பிறந்த மாதவய்யா, பெ.நா.அப்புசாமி, விட்டலாபுரத்தில் பிறந்த பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எட்டயபுரத்தில் பிறந்த இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, ஒட்டநத்தத்தை சேர்ந்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், மதுரகவி பாஸ்கரதாஸ், குருமலை சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் அ. சீனிவாச ராகவன், சாத்தான்குளம் ராகவன், உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணம் ஆச்சாரியார் என இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நீண்ட அறிஞர்களை வரிசைப்படுத்தலாம். இடைச்செவல் என்ற ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோர் சாகித்ய அகாடமி விருது பெற்றது முக்கிய செய்தியாகும். திரை உலகில் மறைந்த நடிகர் சந்திரபாபு, திருவைகுண்டத்தில் பிறந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.எஸ்.பாலையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் உள்ளடக்கிய நவத்திருப்பதிகள், கழுகுமலை, கிறித்துவர்கள் வணங்கும் மணப்பாடு, தூத்துக்குடியில் உள்ள மாதா கோவில் என்ற திருத்தலங்களும் உண்டு. இம்மாவட்டத்தில் கிறித்துவ, இந்து, இஸ்லாம் மக்கள் சகோதர பாசத்தோடு பழகுவது ஒரு வாடியாக்கையான நிகழ்வாகும். திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, புன்னைக்காயல் வரை பச்சைப் பசேலென்று வாழை, நெல்வயல்கள் உள்ளன. பெருங்குளத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து சேர்கின்றன. இப்படி பல சிறப்புகள் இந்த மாவட்டத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவில் உள்ள பத்து துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம் உப்பு, மீன்பிடி தொழில் என்ற நிலை மாறி, மின்சாரம் தயாரிக்கும் நகரமாகிவிட்டது. நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்நகரத்துக்கு ஸ்பிக் தொழிற்சாலை, தேங்காய் எண்ணெய், பெயிண்ட் உற்பத்தி ஆலைகள் இருந்தன. ஆனால் இன்று ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலைகள் என பல நிறுவனங்கள் இந்நகரத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்ற கருத்து பலமாக உள்ளது. மராட்டியத்தில் இரத்தினகிரியில் அல்போன்ஸô மாம்பழ உற்பத்தி பாதிக்கப்படும் என்பதற்காக அங்கிருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் குடிபுகுந்தது. இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. இங்குள்ள கடலின் ஆழத்தை பதினாறு அடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. கிழக்குக் கடற்கரை சாலை அமைந்ததால் தூத்துக்குடி எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ளது. காரைக்குடியிலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை ரயில் போக்குவரத்து பரிசீலனையில் உள்ளது. சிப்காட் வளாகம், உணவுப் பூங்கா போன்ற திட்டங்கள் தற்போது வந்துள்ளன. இங்கு இருந்த 20 சதவீத நிலக்கரி இறக்குமதி காரைக்கால் துறைமுகத்துக்கு மாற்றப்பட்டது வருத்தத்தைத் தந்துள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி பகுதியை ஒட்டி 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. சாத்தான்குளம், திருச்செந்தூர் ஒட்டிய பகுதிகளில் பாயும் தாமிரபரணி உபரி நதிகளை இணைத்து தேரிக்காட்டிற்கு வரக்கூடிய நதிநீர் இணைப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு, அத்திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் வடக்கே உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகள் மானாவாரி கரிசல் பூமி இங்கு அடிக்கடி விவசாயம் பொய்த்து வருகிறது. இப்பத்தியாளர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்கின் காரணமாக அச்சன்கோவில் பம்பை இம்மண்ணில் வைப்பாற்றில் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசு, வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை வழங்க மறுக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இம்மண்ணில் விவசாயம் செழித்து வளரும். தூத்துக்குடி நகரம் இந்தியாவுக்கே உப்பிட்டது. ஆனால் இன்று இங்கு குஜராத்திலிருந்து உப்பு வருகிற நிலைமை உள்ளது. பழமையான உப்புத் தொழிலை நம்பி 60,000 பேர் வாழ்கின்றனர். வணிக தொழில் நகரமான கோவில்பட்டியில் நெசவாலைகள், நீண்டகாலமாக இருக்கும் லட்சுமி மில்ஸ், லாயல் மில்ஸ் பல குடும்பங்களுக்கு தீபம் ஏற்றி வந்தது. ஆனால், இன்றைக்கு அந்த ஆலைகளும் சிறப்பாக இயங்கவில்லை. இங்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகளே ஏழைகளுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. இம்மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் கண்டு இருந்தாலும் தமிழகப் பொருளாதார வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் முக்கிய அங்கம் வகிக்கிறது. சேதுக் கால்வாய் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களால் தூத்துக்குடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும். உப்புத் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் மட்டுமல்லாமல் துறைமுக நகரமான தூத்துக்குடி, பாண்டியர் காலத்துச் சரித்திரப் பெருமையை மீண்டும் அடைய வேண்டும். கால்நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாவட்டம் அரை நூற்றாண்டின் சிறந்த பெருமைகளை மீட்டெடுக்கும் என்று வாழ்த்துவோமாக
நன்றி தினமணி
நன்றி தினமணி
Labels:
சமுகம்
Tuesday, October 19, 2010
காதல்னா என்ன?
காதலர்கள் இல்லாத தேசமே இந்த உலகில் இல்லை.. ஆனால் அவர்களில் எத்தனை பேர் உண்மையாக காதலிக்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் கணவனிடமோ மனைவியுடமோ இருக்கும் குறையை மட்டுமே பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? பிரச்சினைகள் இல்லாத காதலர்களோ, பிரச்சினைகள், சண்டைகள் இல்லாத கணவன் மனைவியோ கிடையாது இல்லையா..
ஆனால் அவர்கள் எல்லாம் பின்வரும் புகைப்படங்களை சற்று பார்த்தால்...அவங்கவங்க காதலர்கள்ட்ட இருக்கற நேர்மறையான விசயம் என்னங்கறதை யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க...
நீங்களே இந்த படங்களை எல்லாம் கொஞ்சம் பாருங்க...எனக்கு சொல்றதுக்கு வார்த்தைகள் குறைவுதான்... ஆனால் இந்தப் புகைப்படங்கள் பேசும் விசயங்கள் நிறைய..!!!!!
Thanks
http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_19.html
ஆனால் அவர்கள் எல்லாம் பின்வரும் புகைப்படங்களை சற்று பார்த்தால்...அவங்கவங்க காதலர்கள்ட்ட இருக்கற நேர்மறையான விசயம் என்னங்கறதை யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க...
நீங்களே இந்த படங்களை எல்லாம் கொஞ்சம் பாருங்க...எனக்கு சொல்றதுக்கு வார்த்தைகள் குறைவுதான்... ஆனால் இந்தப் புகைப்படங்கள் பேசும் விசயங்கள் நிறைய..!!!!!
Thanks
http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_19.html
Labels:
உறவுகள்
Friday, October 15, 2010
இந்தநாளும் இனிய நாளே !
இன்று தலைகுனிந்து படிப்பதெல்லாம்
நாளை தலைநிமிர்ந்து நடப்பட்ப்பதற்கே...
இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே...
இன்று முகம் கவிழ்ந்து போவதெல்லாம்
நாளை முகம் மலர்ந்து வாழ்வதற்கே...
இன்று வலியாய் இருப்பதெல்லாம்
நாளை சிலையாய் மாறுவதற்கே...
நன்றி:எழுதியவருக்கு
இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.
தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.
படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!
நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.
இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.
நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.
வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே....
http://bharathbharathi.blogspot.com/2010/09/blog-post_7699.html
நாளை தலைநிமிர்ந்து நடப்பட்ப்பதற்கே...
இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே...
இன்று முகம் கவிழ்ந்து போவதெல்லாம்
நாளை முகம் மலர்ந்து வாழ்வதற்கே...
இன்று வலியாய் இருப்பதெல்லாம்
நாளை சிலையாய் மாறுவதற்கே...
நன்றி:எழுதியவருக்கு
இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.
தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.
படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!
நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.
இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.
நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.
வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே....
http://bharathbharathi.blogspot.com/2010/09/blog-post_7699.html
Labels:
சுய முன்னேற்றம்
வேறு என்ன வேண்டும் ?
(உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை.
நான் பள்ளி மாணவி.
நீங்கள் வாழ்க்கைப் பாடத்தில் மாணவி / மாணவன்.)
பொன் நகையை சுமப்பது அல்ல வாழ்க்கை
புன்னகையை சுமப்பது வாழ்க்கை
கற்பது மட்டுமல்ல வாழ்க்கை
கற்றபடி நடப்பதுதான் வாழ்க்கை
தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வது தான் வாழ்க்கை
சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை
வரலாறு படிப்பதல்ல வாழ்க்கை
வரலாறு படைப்பதுதான் வாழ்க்கை
கோடி நாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை
-- ரோசரி XI-A
http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_7578.htm
நான் பள்ளி மாணவி.
நீங்கள் வாழ்க்கைப் பாடத்தில் மாணவி / மாணவன்.)
பொன் நகையை சுமப்பது அல்ல வாழ்க்கை
புன்னகையை சுமப்பது வாழ்க்கை
கற்பது மட்டுமல்ல வாழ்க்கை
கற்றபடி நடப்பதுதான் வாழ்க்கை
தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வது தான் வாழ்க்கை
சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை
வரலாறு படிப்பதல்ல வாழ்க்கை
வரலாறு படைப்பதுதான் வாழ்க்கை
கோடி நாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை
-- ரோசரி XI-A
http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_7578.htm
Labels:
சுய முன்னேற்றம்
Thursday, October 14, 2010
மெய் சிலிர்க்க வைக்கும் சிலி
கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!
இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.
ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.
சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.
அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.
இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.
வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.
நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.
1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.
இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
(நன்றி தினமணி )
Labels:
சமுகம்
Wednesday, October 13, 2010
எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
1. ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நன்றி -நண்பேண்டா)
2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?
காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.
காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.
காதலி - என் இடுப்பை கிள்ளுவே.
காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.
காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.
காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?
3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்
1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)
2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)
3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)
4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)
5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)
6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)
7. மாமா கதை (THE POLICE STORY).
4 . பாய்ஸ்னா யாரு?
நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .
5.நேத்து நைட் ஒரு பெண்ணை ரேப்பிலிருந்து காப்பாத்திட்டேன்.
எப்படிடா?
எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)
6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.
உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,
என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.
இப்படிக்கு ,
தங்கள் கீழ்ப்படிந்துள்ள
அடங்காப்பிடாரி ஆறுமுகம்.
7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.
8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.
நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.
ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?
9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.
இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.
இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா
எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.
10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?
கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.
நன்றி
http://adrasaka.blogspot.com/2010/10/18-3654.html
2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?
காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.
காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.
காதலி - என் இடுப்பை கிள்ளுவே.
காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.
காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.
காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?
3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்
1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)
2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)
3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)
4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)
5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)
6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)
7. மாமா கதை (THE POLICE STORY).
4 . பாய்ஸ்னா யாரு?
நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .
5.நேத்து நைட் ஒரு பெண்ணை ரேப்பிலிருந்து காப்பாத்திட்டேன்.
எப்படிடா?
எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)
6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.
உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,
என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.
இப்படிக்கு ,
தங்கள் கீழ்ப்படிந்துள்ள
அடங்காப்பிடாரி ஆறுமுகம்.
7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.
8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.
நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.
ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?
9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.
இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.
இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா
எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.
10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?
கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.
நன்றி
http://adrasaka.blogspot.com/2010/10/18-3654.html
Labels:
இளைப்பாற
Friday, October 8, 2010
எந்திரன் தெளிவான முழுநிளத்திரைப்படம்
படம் பார்க்க இங்கே சொடுக்கவும்
http://v.youku.com/v_show/id_XMjEyMjM1MzM2.html
சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது.
உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.
எங்கு பார்த்தாலும் எந்திரன் கோஷம்! திருட்டு விசிடியா? குண்டர் சட்டம்!!
நீதிதேவன் மயக்கம். அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். அந்த நாடகத்தை அறிஞர் அண்ணா என்ன நினைத்து எழுதினாரோ.. இன்று அது உண்மையாகி விடுமோ என்று அஞ்ச வைக்கிறது. கேடி சகோதரர்கள் என்று அழைக்கப்படும், கலாநிதி மற்றும் தயாநிதி ஆகியோர், கருணாநிதியை விட எப்படி மிகப் பெரிய தீயசக்தி என்று சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தது. அது மீண்டும் மீண்டும் உண்மை ஆகி வருகிறது.Image
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு யுகப்புரட்சி நடந்து விட்டது போல, எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன் என்ற கோஷமும், சன் டிவியை திறந்தால், எந்திரன் திருட்டு விசிடியை ரசிகர்கள் கண்டு பிடித்தனர் என்று செய்தி. இது பத்தாது என்று, மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஸ்ரீதர் வேறு பேட்டி கொடுக்கிறார். எந்திரன் திருட்டு டிவிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று. (ஸ்ரீதர் சார், நீலப்படம் விற்றால் பாயாதா சார் ?) கருணாநிதியோடு, கேடி சகோதரர்கள் பிணக்கில் இருந்த காலத்திலேயே, தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு வேலைகளை கேடி சகோதரர்களால் செய்ய முடிந்தது. கோவையில், பைபர் ஆப்டிக் இழைகளை சன் டிவி நிர்வாகத்தார் அறுத்து எரிந்த போது, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என்று, ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதி அனுப்பிய கடிதம் குப்பையில் போடப்பட்டது. ஆனால், எந்திரன் பட சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று ஒரு காவல் துறை அதிகாரி சன் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த அளவுக்கு, அரசு நிர்வாகத்தை மடக்கிப் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.Image
ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்தது போல, ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்று அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்து விட்டு, நீதித்துறையையும் கபளீகரம் செய்ய கேடி சகோதரர்கள் முதல் முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும், அதற்கு நமது நீதிமான்கள் துணை போயிருக்கிறார்கள் என்பதையும் சவுக்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறது.
நேற்று (செவ்வாய்) இரவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Four Frames என்ற தியேட்டரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 24 நீதியரசர்கள், தங்கள் குடும்பத்தினருடன், எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்திருக்கிறார்கள் என்ற தகவலை சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
நீதிபதிகள் என்றால் அவர்களுக்கு ஆசா பாசம் இருக்கக் கூடாதா, ஏன் அவர்கள் சினிமா பார்க்கக் கூடாதா என்று கேள்வி எழும். நீதிபதிகள் சினிமா பார்க்கலாம். குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், யார் செலவில், யார் அழைப்பில் என்பதுதான் கேள்வி.
சென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் எந்திரன் படம் ஓடுகிறது. தங்களின் Security Officer ம் சொன்னால், டிக்கட் எடுத்து தரமாட்டார்களா ? டிக்கட் எடுத்துப் படம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாமல் நீதிபதிகள் வறுமையில் இருக்கிறார்களா ? அப்படியே வறுமையில் இருந்தாலும், அப்படி என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது?Image
Four Frames என்ற திரையரங்கம், பொது மக்கள் பார்ப்பதற்கானது அல்ல. Preview ஷோ என்றழைக்கப் படும் பிரத்யேக திரையிடலுக்கான தியேட்டர் அது. அந்தத் தியேட்டரில் நீதிபதிகளுக்கான பிரத்யேகத் திரையிடல் இருக்கிறது, நீதிபதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பில், அழைப்பிதழ் வழங்கப் பட்டதாகவும் அதை ஏற்று 24 நீதிபதிகள் குடும்பத்துடன் எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் பிக்சர்ஸ் சார்பாக, நாளை ஏதோ ஒரு வழக்கு வருகிறதா இல்லையா என்பது அடுத்த விஷயம். இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இருக்கும், மங்குணி கண்ணாயிரத்தால் இது வரை கைது செய்யப் படாத துவைக்காத சாக்ஸ் என்று பிரபலமாக அழைக்கப் படும் சக்சேனாதான் சன் பிக்சர்ஸுக்கு தலைமை அதிகாரி என்பது அந்த 24 நீதிமான்களுக்கு தெரியுமா ? அந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, அப்பாவி ஆட்டோ டிரைவர்களைத் தவிர, வேறு யாருமே கைது செய்யப் படவில்லை என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ? Four Frames திரையரங்கில் நீதிமான்களை வரவேற்றவர்களுள் துவைக்காத சாக்ஸும் அடக்கம் என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ?
ஒரு தேடப்படும் குற்றவாளியோடு சேர்ந்து இரவுக் காட்சி பார்க்கும் இந்த 24 நீதிமான்களை என்னவென்று சொல்வது ? நம்மை யாருமே கேள்வி கேட்க முடியாது, நாம் கடவுளுக்கு நிகரானவர்கள், அதனால்தான் நம்மை “மை லார்ட்“ என்று அழைக்கிறார்கள் என்ற அகந்தை தானே காரணம் ?
யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற அகந்தை தானே, பாதிக்கப் படப் போகும் பெற்றோர்களை பற்றி சற்றும் நினைக்காமல், மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக தீர்ப்பளிக்க தைரியம் அளித்தது ?
Imageஆனால், இதையெல்லாம் சரிக்கட்ட Judicial Standards and Accountability Bill 2010 என்ற புதிய சட்டம் வர இருக்கிறது. இதன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும், இதன் வரம்பில் வருவார்கள். ரொம்பவும் கடுமையான சட்டம் போல இது தோன்றாவிட்டாலும், எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று பரவாயில்லை அல்லவா ? முதலில் இந்தச் சட்டம் வரட்டும். அதன் பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து, செம்மையாக்குவோம்.
எந்திரன் படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
அடுத்த எந்திரன் செய்தி. டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், தினமணி நாளிதழும், எந்திரன் என்ற திரைப்படம் எப்படி ஏகபோக முதலாளித்துவத்தை வளர்க்கிறது, சிறிய படங்கள் எப்படி இதனால் நாசமாக்கப் படுகின்றன என்று வெளியிட்ட இரண்டு செய்திகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று இன்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த இரண்டு நாளிதழ்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.
முதலமைச்சருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு விட்டு, குடும்பத்தினர் சகிதமாக எந்திரன் படம் பார்த்துவிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சன் பிக்சர்ஸ் இப்படி படம் எடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது என்னையே நான் பாராட்டிக் கொள்வது போலாகும் என்று கூறும், ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் இருக்கும் போது, கேடி சகோதரர்களுக்கு திமிருக்கு என்ன குறைச்சல் ?
இப்போது சவுக்கு மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரட்டும். கேடி சகோதரர்களுக்கு மானமே இல்லை. இல்லாத மானத்தை எப்படி நஷ்டப் படுத்த முடியும் என்று பதில் வழக்கு சவுக்கு தொடுக்கும். கேடி சகோதரர்களின் வரலாறு, கலாநிதிக்கும் காவேரி கலாநிதிக்கும் திருமணம் ஆன சூழல், கலாநிதியின் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சந்தியில் கொண்டு வந்து சவுக்கு நிறுத்தும்.
கேடி சகோதரர்களே….. உங்கள் பருப்பு பகவான் சிங்கிடம் வேகலாம். ஆனால், சவுக்கிடம், எந்த குக்கரில் வேகவைத்தாலும் வேகாது.
சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது. உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.
நன்றி : சவுக்கு.நெட்,
http://suthumaathukal.blogspot.com/2010/10/blog-post_558.html
Labels:
உங்களுக்கு உதவும்
Subscribe to:
Posts (Atom)