Monday, September 27, 2010

ஹிட்லரின் கொடூரக்கொலைகள்



சர்வாதிகாரம் என்பதற்கு பொருள் அடால்ஃப் ஹிட்லர் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஹிட்லர் லட்சக்கணக்கான கொலைகளில் சில..

முதல் உலகப்போரில் 40000 குழந்தைகள் கொல்லப்பட்டன. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இது பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது.
சிறைகளில் சித்திரவதைக்கூடம் இருக்கும், சிறையே சித்ரவதைக்கூடமாக இருந்தது ஜெர்மனியில், ஹிட்லரின் ஆட்சி காலத்தில்.1933 ஜெர்மனியில் ரெய்க் ஸ்டாக் சிறை தீக்கிரையான போது அரசியல் மற்றும் ராணுவ எதிரிகளை அடைப்பதற்காக உருவாகப்பட்டது நாஜி சிறைச்சாலைகள். யூதர்களை தேடிப்பிடித்து கைது செய்து நிர்வாணமாக சிறைக்கு அனுப்புவார்கள்,

சிறைக்கு வரும் போது இறந்து விட்டால் அவன் அதிஷ்டசாலி. அல்லாமல் சிறைக்கு வந்தால் காற்று புகாத அளவுக்கு மூடப்பட்ட அறையில் ஆட்டு மந்தை மாதிரி மனிதைகளை அடைத்து விஷ வாயுவை செலுத்தி மூச்சுத்திணறி ஒவ்வொருவராக செத்துமடிவதை பார்த்து மகிழ்வார்கள். துப்பாக்கியை பரிசோதிக்க யூதர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டார்கள், மருத்துவ பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்தார்கள், தோலைஉரித்தும், வெந்நீரில் மிதக்கவிட்டும் மகிழ்ந்தார்கள்.

1942 - ம் வருடம் ஆஸ்விச் சேம்பர் என்ற புதிய சிறையை கட்டினார் ஹிட்லர். அந்த சிறையில் 15 நாட்களுக்கு ஒரு ரொட்டித்துண்டு மட்டுமே கொடுப்பார்கள், அதை சாப்பிட்டு சாகாமல் இருந்தால் அவன் பரிட்சையில் பாஸ், இந்த செய்தி தெரிந்து அப்பாவி யூதர்கள் காவலர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்விச் சேம்பருக்கு வரதொடங்கினார்கள், ( உடனே வரும் சாவை கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்று ) கைதிகள் எண்ணிக்கை அதிகமானதை பார்த்த காவலர்கள் ரொட்டித்துண்டு கொடுப்பதை நிறுத்தி விட்டு விஷ வாயுவை செலுத்தி கொல்ல ஆரம்பித்தார்கள்.

இரண்டு ஆண்டுகளில் ஆஸ்விச் சேம்பரில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சம்

ஹிட்லரின் கொமைகளில் சில
































Source:http://verumpaye.blogspot.com/2010/04/blog-post_12.html

No comments:

Post a Comment